தீபாவளி முடிந்ததும் சிவகார்த்திகேயன் வீட்டில் மகளுக்கு நடந்த கொண்டாட்டம்! ஆர்த்தி பகிர்ந்த போஸ்ட்
சென்னை: தமிழ் சினிமாவின் 'இளவரசன்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவிற்க்கு இன்று பிறந்தநாள்! இந்த சிறப்பான நாளில், அவருடைய தாயார் ஆர்த்தி சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மகளுடன் எடுத்த அழகிய புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தாயும் மகளும் சேர்ந்துள்ள இந்தப் பாசமிகு தருணங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை
சிவகார்த்திகேயனின் திரைப்பயணம் பல இளைஞர்களுக்கு ஒரு கனவுப் பயணமாகும். திருச்சியைச் சேர்ந்த சிவகார்த்திகேயன், ஆரம்பத்தில் சின்னத்திரையில் ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியன் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானார். அவருடைய நகைச்சுவை உணர்வும், எதார்த்த பேச்சும் அவரை இளைஞர்கள் மத்தியில் விரைவில் பிரபலப்படுத்தின.
திரை வளர்ச்சி
2012 ஆம் ஆண்டு 'மெரினா' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு, அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தொடர் வெற்றியை பெற்று, குறுகிய காலத்திலேயே அவரைத் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்த்தியது. அவரது வளர்ச்சியின் உச்சமாக, தற்போது அவர் தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார்.
அன்பின் அடையாளமாய் ஆராதனா
சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகளும் குகன் தாஸ் மற்றும் பவன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகள் ஆராதனா, சிறு வயதிலேயே தனது தந்தையுடன் இணைந்துப் பாடிய 'வாயாடி பெத்த புள்ள' பாடல் மூலம் தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். அப்பா, மகள் இருவரும் சேர்ந்து பாடிய அந்தப் பாடல், பல கோடிப் பார்வைகளைக் குவித்து சாதனை படைத்தது.
வாயாடி பெத்த புள்ளயின் பெருமை
தன்னுடைய மகள் குறித்துப் பொதுவெளியிலும், பல மேடைகளிலும் சிவகார்த்திகேயன் எப்போதும் பெருமையுடன் பேசியிருக்கிறார். "எனக்கு சினிமா எவ்வளவு முக்கியமோ, அதைவிட என் மகள் ஆராதனா எனக்கு ரொம்பவே முக்கியம். அவள் தான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம். எனது படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் அவள் பாடுவதைக் கேட்கும்போது, ஒரு அப்பாவாக எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருக்கும்" என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

ஆர்த்தியின் வாழ்த்து
மகள் ஆராதனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆர்த்தி சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "Happy happy birthday papa" என்று குறிப்பிட்டு, ஆராதனாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில், ஆராதனா துறுதுறுவெனவும், ஆர்த்தி பாசத்துடனும் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் இந்த வெற்றிப் பயணத்தில், அவரது குடும்பம் அளிக்கும் ஆதரவும், குறிப்பாக மகள் ஆராதனா அளிக்கும் மகிழ்ச்சியும் ஒரு மிகப் பெரிய பலமாகும். இந்த இனிய பிறந்தநாளில் ஆராதனாக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications