சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறார். ஒரு பக்கம் பெரிய பட்ஜெட் படங்கள், மறுபக்கம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு என பிஸியாக இருக்கும் நிலையில், அவரை வைத்து இரண்டு படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷ் பகிர்ந்துள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களால் தங்களது நிறுவனம் மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

120 கோடியாக உயர்ந்த சுமை
இதுகுறித்து பேசிய ராஜேஷ், "முதலில் எங்களுக்கு ஏற்பட்ட கடன் சுமார் 90 கோடி ரூபாய் தான். ஆனால் கொரோனா கால தாமதம், வட்டி சுமை, பட வெளியீட்டு பிரச்சனைகள் என பல காரணங்களால் அது தற்போது 120 கோடி ரூபாய் வரை உயர்ந்துவிட்டது" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
ஒரு திரைப்படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, அதனுடன் தொடர்புடைய பல குடும்பங்களும் பாதிக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த இரண்டு படங்களின் நிதிச்சுமை இன்னும் தங்களை துரத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கும் இழப்பா?
இந்த இரண்டு படங்களால் தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டுமல்ல, சிவகார்த்திகேயனுக்கும் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டதாக ராஜேஷ் கூறியுள்ளார்.
"சிவகார்த்திகேயனுக்கும் சுமார் 55 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் போட்ட ஒப்பந்தப்படி அவர் இன்னும் இரண்டு படங்களில் நடித்துக் கொடுக்க வேண்டும். ஆனால் அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. எல்லாம் கடவுள் கையில் தான் இருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார். இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
டிவியில் இருந்து திரையுலக உச்சிக்கு
சிவகார்த்திகேயனின் பயணம் சாதாரணமானதல்ல. தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர், பின்னர் நகைச்சுவை நடிகராகவும் அதன் பிறகு ஹீரோவாகவும் வளர்ந்தார்.
மெரினா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, டாக்டர், டான் போன்ற படங்கள் அவரை முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு கொண்டு சென்றன.
குறிப்பாக குடும்ப ரசிகர்களும், குழந்தைகளும் விரும்பும் நடிகராக உருவெடுத்தது சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய பலமாக அமைந்தது.
வெற்றியும் தோல்வியும் கலந்த பயணம்
ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றாலும், பின்னர் சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.
அதிலும் ஹீரோ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானாலும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை. பல ஆண்டுகள் தாமதத்திற்கு பிறகு வெளியான அயலான் படமும் ரசிகர்களிடம் கலவையான வரவேற்பையே பெற்றது. இந்த இரண்டு படங்களின் பைனான்ஸ் தாக்கம் இன்னும் தயாரிப்பு தரப்பை பாதித்து வருவதாக கூறப்படுகிறது.
அமரன் மீண்டும் உயிர் கொடுத்ததா?
இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படம் அவரின் மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தியது. ஆனால் அதன்பின்னர் வெளியான சில படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன. இதனால் தற்போது உருவாகி வரும் சேயோன் படத்தின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.
சேயோன் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சேயோன் படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படம் சிவகார்த்திகேயனின் அடுத்த முக்கிய படமாக பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியாக வெற்றியை தேடி வரும் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் மிகப்பெரிய கம்பேக் படமாக அமையும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
கடனில் தவிக்கும் தயாரிப்பாளர்
ஒருபுறம் தயாரிப்பாளர் 120 கோடி ரூபாய் கடன் குறித்து உருக்கமாக பேசியிருக்கும் நிலையில், மறுபுறம் தனது அடுத்த படங்களின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற அழுத்தமும் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால் தற்போது உருவாகி வரும் சேயோன் படம், ஒரு சாதாரண திரைப்படமாக இல்லாமல், சிவகார்த்திகேயனின் அடுத்த கட்ட பயணத்தை தீர்மானிக்கும் முக்கிய படமாகவே பார்க்கப்படுகிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்













Click it and Unblock the Notifications