Sneha: சினேகாவை நோக்கி செய்தியாளர் கேட்ட கேள்வி! நாக்கை துருத்திய பிரசன்னா.. இவ்ளோ கோபப்படுறாரே!
சென்னை: நடிகை சினேகா தான் தொடங்கிய சினேகாலயா நிறுவனத்தின் ப்ரோமோஷனில் தான் புதியதாக உருவாக்கிய ஆடைகளை அறிமுகப்படுத்தி இருந்தார். அப்போது செய்தியாளர்களும் அங்கு வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கேட்ட கேள்வியை கேட்டு சினேகாவின் கணவரான நடிகர் பிரசன்னா கடுப்பாகி நாக்கை துருத்தி மிரட்டி இருக்கிறார்.
நடிகை சினேகா தமிழ் சினிமாவில் புன்னகை அரசியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். 90s காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமானாலும் இப்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு பிறகு பல நடிகைகளுக்கு மார்க்கெட் குறைந்துவிடும். ஆனால் சினேகா அதற்கெல்லாம் நேர்மாறாகவே ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் இப்போது மீண்டும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் பிசினஸிலும் கவனம் செலுத்தி இருக்கிறார். சினேகா சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் போது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாகவே பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஆனாலும் அதையெல்லாம் அவர்கள் கண்டு கொள்வதில்லை. சில நேரங்களில் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்று பரவிய வதந்திகளுக்கு கூட மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இப்போது சினேகா தொடங்கி இருக்கும் சினேகாலயா நிறுவனத்தின் புதிய புடவையை அறிமுகம் செய்யும் விழா நடந்தது. அதில் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு இருந்த செய்தியாளர் ஒருவர் பிரசன்னாவிடம், சார் சினேகா மேடம் நான் மட்டும் எத்தனை வயதானாலும் அப்படியே இருக்கிறார்களே? வயது என்பது நம்பர் என்பது போல இருக்கிறாங்க என்று சொல்லிக் கொண்டு இருக்க அதற்கு பிரசன்னா நாக்கை துருத்தி டேய் என் மனைவி இது என்று சொல்வது போல சைகை காட்ட, அங்கிருந்து எல்லோரும் சிரித்து இருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதை பார்க்கும் சில நெட்டிசன்கள் பிரசன்னா செய்தியாளர்களை மிரட்டி இருக்கிறார் என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் தன் முன்பே மனைவியை பெருமையாக பேசியதை பிரசன்னாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா? அல்லது இது என்னுடைய பிராபர்ட்டி யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்று இவர் இப்படி சொல்கிறாரா? என்று கூட கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.

எது எப்படியோ சினேகா தன்னுடைய கணவரின் செய்கையை பார்த்து சிரித்துக் கொண்டுதான் இருந்தார். பிறகு அவர் பேசும் போது தன்னுடைய சினேகாலயா சார்பில் அறிமுகப்படுத்தப்படும் புடவைகள் ஒவ்வொரு வருடமும் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பிடித்து வருவதாகவும், தொடர்ந்து தன்னுடைய நிறுவனத்தை கவனிப்பது தான் தன்னுடைய நோக்கம் என்றும் சொல்லி இருந்தார்.
அதோடு விஜய்யோடு சினேகா கோட் படத்தில் நடித்திருந்தார். அதுபோல பிரசன்னா அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இதனால் இவர்கள் இருவரை பற்றிய கேள்விகளையும் செய்தியாளர்கள் எழுப்பி இருந்தனர். அதற்கு பிரசன்னா விஜய் மற்றும் அஜித் இருவரும் அவர்களுடைய குறிக்கோளை நோக்கிய பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அதைப் பற்றி நாம சொல்ல முடியாது. அவர்கள் இருவரும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய வாழ்த்துக்கள் என்று சொல்லி இருந்தார்.
அடுத்ததாக 2026 இல் விஜயால் அரசியலில் மாற்றம் வருமா என்று கேட்டதற்கு பிரசன்னா மற்றும் சினேகா இருவருமே அதை நாங்கள் இருவரும் மட்டும் சொல்ல முடியாது. மக்கள் என்ன நினைக்கிறார்களோ அப்படி நடக்கும் என்று பேச்சை நிறுத்தி இருக்கிறார்கள்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications