சவுந்தர்யா ஒரு பொளேர் ...முத்துச்செல்வி ஒரு பொளேர்..!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் கல்யாணம்..கல்யாணம்னு போயிகிட்டு இருக்கு. இன்னும் யாருக்கும் கல்யாணம் நடக்கலை.
முத்துச்செல்வி சின்னவரை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட, சவுந்தர்யாவை கல்யாணம் பண்ணிக்க ஆகாஷ் ஆசைப்பட..கல்யாணத்தை பத்தின நினைப்பே இல்லாத கண்ணனுக்கு கல்யாணம் முடிவாகுது.
சவுந்தர்யாவிடம் ஆகாஷ் அம்மா உனக்கு மாமனும் இல்லை, ஆகாஷும் இல்லைடி.... தனி மரமா நிக்கப் போறேன்னு சொல்லி வெறுப்பேத்தறாங்க. உடனே ஆகாஷை வர சொல்றா சவுந்தர்யா.
என் மாமாகிட்ட ஏதாவது நீ பேசுனியான்னு கேட்கறா.ஆமாம் பேசினேன்...நான் இன்னும் உன்னை சின்சியரா லவ் பண்றேன் சவுந்தர்யா..நீங்க கல்யாணம் செய்துகிட்டாத்தான் சவுந்தர்யா என்னைக் கல்யாணம் பண்ணிப்பான்னு சொன்னேன்னு சொல்றான்.
அவ்ளோதான் பளீர்னு ஒரு அறை... முட்டாள்.. இப்படி பண்ணிட்டியே.. நான்தான் என் மாமாவை காதலிக்கறேன்னு சொன்னேனே ஆகாஷ்.. சும்மா தோழமையா பழகலாம்னு சொல்லிட்டு, கடைசியில மாமாகிட்ட இப்படி சொல்லிட்டியே.. இதனால்தான் மாமா முத்துசெல்வியை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு இருக்கார்.
என் மாமா வாழ்க்கையை பாழாக்கிட்டியேன்னு சொல்லி அழறா..உங்க அம்மா கேவலமா பேசறாங்கன்னு சொல்ல வந்தா நீ படு கேவலமா நடந்து இருக்கேன்னு சொல்லி அழறா.
முத்துச்செல்வி தங்கச்சிகூட கோயிலுக்கு போயிட்டு வர்றா. அப்போ அவளுக்கு எதிரியான அவ மேல ஆசைப்படற மாயன், எனக்கும், உனக்கும்தாண்டி கல்யாணம் நடக்கும்னு சவால் விடறான்.
முத்துசெல்வி அவன் கன்னத்தில் பொளேர்னு விடறா ஒரு அறை. இப்போ சின்னவருக்கும் எனக்கும் ஒப்பு தாம்பூலம்தாண்டா மாத்தி இருக்கோம்.அதுக்கே உன்னை அடிக்கற தைரியம் வந்துருச்சு.இன்னும் என்கழுத்துல தாலி ஏறட்டும்.. உன், கழுத்துக்கு மேல தலை இருக்காதுன்னு சொல்றா.
ரெண்டு பொண்ணுங்களின் பொளேர் எப்படி..சும்மா கிர்ர்ர்னு தலை சுத்தி இருக்கும்ல...
தள்ளிப் போகும் முதலிரவுகள்.. தல பட ஸ்டைலுக்கு மாறும் சீரியல்கள்!