நாதஸ்வரம் ராகினியின் திடீர் சர்ப்ரைஸ்...எளிமையாக ரகசியத்தை உடைத்து விட்டாரே
சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையான சுருதி சண்முகப்பிரியா தன்னுடைய சந்தோசத்தை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
மகிழ்ச்சியான செய்தியை சொன்ன இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நாதஸ்வரத்தில் அறிமுகம்
சன் டிவியில் 2010 முதல் 2015 வரையில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியலான நாதஸ்வரத்தில் ராகினி கேரக்டரில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான ஸ்ருதி தற்போது தன்னுடைய ரசிகர்களிடம் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். புதிய செய்தியைக் கேட்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சிறிது ஏமாற்றம் மனதிற்குள் இருந்தாலும் பலர் பெருந்தன்மையாக இவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருவது பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள்.

ராகினி ஆக மனம் கவர்ந்தவர்
கல்லூரி படிக்கும்போதே முதல் சீரியலில் அறிமுகமாகி அதற்குப் பிறகு ரசிகர்களின் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிட்டார். பாரதிகண்ணம்மா ,வாணி ராணி, கல்யாண பரிசு, பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற பல பிரபலமான சீரியல்களிலும் நடித்துள்ளார். எத்தனை சீரியல்களில் இவர் நடித்து வந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்த கேரக்டர் என்றால் அது ராகினி தான். நாதஸ்வரம் ராகினி என்னும் கேரக்டர் இவருக்கு நன்றாகவே செட் ஆகிவிட்டது. இப்ப வரைக்கும் பல ரசிகர்கள் இவருடைய உண்மையான பெயரை மறந்து ராகினி என்று அழைத்து வருகிறார்கள். சீரியல் மட்டுமல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

கொடி திரைப்படத்தில் அறிமுகம்
சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் இவர் காலடி எடுத்து வைத்துள்ளார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த கொடி படத்தில் சுருதி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஹீரோயினான அனுபமா பரமேஸ்வரனின் தங்கையாக நடித்துள்ளார். என்னதான் திரையுலகில் தான் சாதித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய வாழ்க்கைத்துணையை தற்போது இவர் தேர்ந்தெடுத்துள்ளார். எளிமையாக நடந்து முடிந்த தன்னுடைய நிச்சயதார்த்தத்தில் போட்டோக்களை தன்னுடைய அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திருமண தேதி இன்னும் முடிவாகாத நிலையில் அரவிந்த் சேகர் என்பவரோடு தனக்கு பூச்சூடல் விழா நடந்தது என்று கூறியுள்ளார்.

மகிழ்ச்சியான செய்தி
அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியின் போது எடுத்த போட்டோக்களை ஷேர் செய்த ஸ்ருதி தன்னுடைய நன்றிகளை தெரிவித்து இதயபூர்வமான குறிப்பை எழுதியுள்ளார். இறுதியாக எனது வாழ்நாள் முழுவதும் தொந்தரவு செய்ய விரும்பும் ஒரு சிறப்பு எனக்கு கிடைத்தது. எங்கள் பூச்சூடல் விழா மற்றும் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண அறிவிப்பு விரைவில் வருவோம். உங்கள் அனைவரின் அன்பும், ஆசீர்வாதமும் வேண்டும் மேலும் பல படங்களை பதிவு செய்ய காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் இந்த போட்டோக்களுக்கு அதிகமாக லைக்களை அளித்து கமெண்ட்களில் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications