Roja Serial: இன்னுமா அணுவை செண்பகம் பொண்ணு இல்லைன்னு நிரூபிக்க முடியலை?
Recommended Video
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் வாரம், மாசம்.. ஏன் வருஷம் கூட கடந்து போச்சு...இன்னும் அணுவை செண்பகம் பொண்ணுன்னு நிரூபிக்க முடியலையாம்.
ரோஜா சீரியலை இளம் ரசிகர்கள் ரோஜாவுக்காகவும், இளம் பெண்கள் அர்ஜுனுக்காகவும் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.
இவர்களே கடுப்பாகும் அளவுக்கு ரோஜா சீரியல் படு இழுவையில் சென்று கொண்டு இருக்கிறது.

திசை திருப்பி
ரோஜா சீரியல் கதையில் ஒவ்வொரு எபிசோடில் அணு செண்பகத்தம்மா பொண்ணுன்னு நிரூபிக்க என்கிற வசனம் மட்டும் இடம்பெற்று விடும். மற்றபடி கதையை திசை திருப்பி ரோஜா அர்ஜுன் ரொமான்ஸ்..பூஜா, அஷ்வின் ரொமான்ஸ் என்று கொண்டு சென்று விடுவார்கள்.

சாக்ஷிக்கு வீடு
கதையில் வில்லியாக வரும் சாக்ஷி பல கொடிய செயல்கள் எல்லாம் செய்வாள். அவளுக்கு வீடு என்று ஒன்று கிடையாதபடி இயக்குநர் ரொம்ப லாவகமாக ஓடும் காரில் அல்லது எங்காவது பார்க்கில் போன் பேச வைத்து சூட் செய்து விடுவார்.எப்போதும் தட்றோம் தூக்கறோம் என்று சொல்வதுதான் இவளின் வேலை.

அன்னபூரணி அம்மா
அன்னபூரணி அம்மாவாக நடிக்கும் வடிவுக்கரசிக்கு, ரோஜாவை வாய் கூசாமல் எங்கியோ கிடந்து வந்தவ என்று டயலாக் பேசுவதுதான் வேலை. அத்தோடு பேத்தி என்கிற பெயரில் பாட்டி பாட்டி என்று நடிக்கும் அணுவை கொஞ்சுவதும். நீதான் இந்த வீட்டு மருமக என்று சொல்வதுதான் டயலாக்.

சினிமா பாணியில்
ரோஜா சீரியல் சினிமா பாணியில் நன்றாக இருக்கிறதே என்று பார்த்தால்...ஷூட்டிங் மட்டும்தான் சினிமா பாணி. ஸ்கிரிப்ட் என்னவோ மெது மெதுவான சீரியல் டைப். அநியாயத்துக்கு கதையின் ஒரு முடிச்சு கூட அவிழ மாட்டேன் என்கிறது.
ரொம்ப இழுக்காதீங்க.. பார்க்கறவங்களும் பார்க்க மாட்டாங்க!












Click it and Unblock the Notifications