Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை மனோரமா சொன்ன வார்த்தை.. வாழ்க்கை இப்படி ஆனது.. மனம் திறந்த நடிகை சுலக்ஷனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சுலக்ஷனா, நடிகை மனோரமா பற்றி பல தகவல்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் தான் நடிக்க வந்ததற்கு காரணம் நடிகை மனோரமா தான் என்று சுலக்ஷனா கூறி இருக்கிறார்.

நடிகை மனோரமா சொன்ன வார்த்தையால் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சுலக்ஷனா பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

பல காலமாக பல நடிகைகள் வெள்ளி திரையில் கொடி கட்டி பறந்து விட்டு தங்களுக்கு அங்கே மார்க்கெட் கொஞ்சம் சரியத் தொடங்கியதும் சின்ன திரையில் கதாநாயகியாகவும், அம்மா கேரக்டர்களிலும் , அக்கா கேரக்டரிலும் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடிக்க தொடங்கி விடுவார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் சுலக்ஷனா.

துலாபாரம் என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதற்குப் பிறகு தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அவதாரம் எடுத்து கிட்டத்தட்ட 450 மடங்களுக்கு மேலே சுலக்ஷனா நடித்திருக்கிறார். அதுவும் கமல் ரஜினி இருவரோடும் ஜோடி போட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் நடிகையாக இருக்கும் போது கிடைத்த அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றி கூறியிருக்கிறார்.

Sulakshana says that actress Manorama is the reason why she came back to acting after marriage

அதில் நான் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தேன், அதற்கு பிறகு எனக்கு குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் நடிகை மனோரமா என்னிடம் பல அட்வைஸ் பண்ணி இருக்கிறார். எப்போதும் நமக்கு வாய்ப்பு வந்தால் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் இப்படித்தான் இருப்பேன் என்று அடம்பிடிக்க கூடாது என்று கூறி இருக்கிறார்.

கதாநாயகியாக இருந்தால் எப்போதும் கதாநாயகியாக தான் இருப்பேன் என்று நான் அடம் பிடித்துக் கொண்டு இருந்தால் அந்த இடத்திற்கு இன்னொருவர் வந்துவிடுவார். கிடைக்கும் வாய்ப்பை நாம் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். அது என்னுடைய மனதில் இப்ப வரைக்கும் நிலைத்திருக்கிறது. அதனால் தான் நான் கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் நடிக்க தொடங்கினேன் என்று சுலக்ஷனா கூறி இருக்கிறார்.

Sulakshana says that actress Manorama is the reason why she came back to acting after marriage

கதாநாயகியாக நடித்துவிட்டு எப்படி அக்கா கேரக்டரிலும் அம்மா கேரக்டரிலும் நடிக்கவே முடியும் என்று சிலர் சினிமாவை விட்டு விலகிப் போய் விடுகிறார்கள். ஆனால் நமக்கு பிடித்த வேலையை நாம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் மீண்டும் இங்கே வந்தேன் இப்போது வரைக்கும் தொடர்கிறேன் என்று சுலக்ஷனா கூறி இருக்கிறார்.

அதோடு நான் சீரியலில் நடிப்பதற்கும் அன்று என்னிடம் மனோரமா கூறிய வார்த்தை தான் நடிகர் மனோரமா எவ்வளவு பிரச்சனைகளை தாண்டி பலராலும் ஆச்சி என்று செல்லமாக அழைக்கும் நிலைக்கு வந்து இருப்பார். அவருடைய நடிப்பில் அனுபவத்தில் கொஞ்சம் கூட நான் பார்த்திருக்கிற மாட்டேன் என்று நினைக்கிறேன். அதனால் அவருடைய வார்த்தையை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+