குழந்தையின் முகத்தை காட்டிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா.. கூடவே உருக்கமான பதிவு..!
சென்னை: சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா தன்னுடைய திருமண நாளில் குழந்தையின் முகத்தை சமூக வலைத்தளத்தில் காட்டி இருக்கிறார்.
அஜய் கிருஷ்ணவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் என்கிற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்தான் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயணன் போலவே மிமிக்ரி செய்து பாடியதன் மூலமாகவே பலருடைய மணங்களில் நீங்காத இடத்தை இப்ப வரைக்கும் பிடித்துக் கொண்டிருக்கிறார். உதித் நாராயணன் பாட்டை கேட்கும் போதெல்லாம் அஜய் கிருஷ்ணா நினைவிற்கு வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு அவருடைய பாடல்களை தத்துரூபமாக பாடி ரசிகர்களின் மனதை வருடி இருக்கிறார்.
இந்த நிலையில் தன் அஜய் கிருஷ்ணா சமீபத்தில் தான் காதலித்து வந்த ஜெசி என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுடைய திருமணம் இந்து முறைப்படி கோவிலிலும், கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சிலும் வைத்து நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு அதிகமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து கூறினார்கள். ரசிகர்களும் வாழ்த்து கூறினார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அஜய் கிருஷ்ணாவின் பிறந்தநாள் அன்று அவருடைய மனைவி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். இதற்கு அதிகமானோர் ஆசீர்வாதங்களை கூறி வாழ்த்து கூறி வந்தனர்.

இந்த வீடியோவை பார்த்த ஜெஸி அப்போது இவருக்கு நன்றாக இருக்கிறது என்று கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு நன்றி கூறிவிட்டு ஜெஸியின் புகைப்படத்தை பார்த்த அஜய் கிருஷ்ணா அவருடைய நீளமான முடி மீது காதல் ஏற்படவே இருவரும் நண்பர்களாக பழகி பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது இவர்களின் காதலுக்கு சாட்சியாக ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இந்த செய்தியை சமீபத்தில் ஜெஸி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் அஜய் கிருஷ்ணா மற்றும் ஜெசி தம்பதி தங்களுடைய முதல் திருமண நாளில் மகனுடைய புகைப்படத்தையும் வெளியிட்டு அவருடைய பெயரையும் பகிர்ந்து இருக்கின்றனர். அந்த பதிவில் எங்களுக்கு மகிழ்ச்சியான முதலாவது ஆண்டு விழா,AJ குடும்பம் உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக உணர்கிறோம். மேலும் எங்கள் சிறிய Ayaan Jaden அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் இரண்டாம் ஆண்டில் இணைந்திருக்கும் நிலையில் உங்கள் அனைவரின் அன்பும் ஆசிர்வாதமும் பணிவுடன் வேண்டுகிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவிற்கு ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications