Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகனுக்காக அஜய் கிருஷ்ணா செய்த செயல்.. கடமை உணர்ச்சி உள்ள தந்தை என மனைவி பாராட்டு

சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா தன்னுடைய மகனை தாலாட்டி தூங்க வைக்கும் வீடியோவை அவருடைய மனைவி ஜெசி பகிர்ந்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்த அஜய் கிருஷ்ணாவுக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது.

குட்டி குழந்தைக்கு தன்னுடைய பாடல் திறமையால் தாலாட்டு பாடி அஜய் கிருஷ்ணா தூங்க வைத்ததை அவருடைய மனைவி அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்திருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் அஜய் கிருஷ்ணாவின் வீடியோவை வெளியிட்டு அவருடைய மனைவி பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

ரம்யமான பாடல்

ரம்யமான பாடல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் என்கிற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்தான் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயணன் போலவே மிமிக்ரி செய்து பாடியதன் மூலமாகவே பலருடைய மனங்களில் நீங்காத இடத்தை இப்ப வரைக்கும் பிடித்துக் கொண்டிருக்கிறார். உதித் நாராயணன் பாட்டை கேட்கும் போதெல்லாம் அஜய் கிருஷ்ணா நினைவிற்கு வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு அவருடைய பாடல்களை தத்துரூபமாக பாடி ரசிகர்களின் மனதை வருடி இருக்கிறார்.

இரண்டு முறைப்படி திருமணம்

இரண்டு முறைப்படி திருமணம்

இந்த நிலையில் தன் அஜய் கிருஷ்ணா சமீபத்தில் தான் காதலித்து வந்த ஜெசி என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுடைய திருமணம் இந்து முறைப்படி கோவிலிலும், கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சிலும் வைத்து நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு அதிகமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து கூறினார்கள். ரசிகர்களும் வாழ்த்து கூறினார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அஜய் கிருஷ்ணாவின் பிறந்தநாள் அன்று அவருடைய மனைவி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். இதற்கு அதிகமானோர் ஆசீர்வாதங்களை கூறி வாழ்த்து கூறி வந்தனர்.

அக்காவால் கிடைத்த வாய்ப்பு

அக்காவால் கிடைத்த வாய்ப்பு

ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் அதிகமான பாடல்களை பாடிவரும் அஜய் கிருஷ்ணாவிற்கு மூன்று அக்காக்கள் இருக்கிறார்கள். அவர்கள் தாயார் சமீபத்தில் இறந்துவிட்ட நிலையில் அவருடைய அக்காவின் அரவணைப்பில் தான் இருந்து வந்திருக்கிறார். அஜய் கிருஷ்ணா அக்கா ஒருவரின் முயற்சியினால் தம்பியின் பாட்டு திறமையை வெளியே கொண்டு வந்து இருக்கிறார். அதன் மூலமாகத்தான் அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட அஜய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணான கண்ணே கலங்காதடி என்ற பாடலை ஆல்பம் போல பாடி பதிவிட்டிருந்தார்.

இணையத்தில் காதல்

இணையத்தில் காதல்

இந்த வீடியோவை பார்த்த ஜெஸி அப்போது இவருக்கு நன்றாக இருக்கிறது என்று கமெண்ட் செய்திருக்கிறார். அதற்கு நன்றி கூறிவிட்டு ஜெஸியின் புகைப்படத்தை பார்த்த அஜய் கிருஷ்ணா அவருடைய நீளமான முடி மீது காதல் ஏற்படவே இருவரும் நண்பர்களாக பழகி பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது இவர்களின் காதலுக்கு சாட்சியாக ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இந்த செய்தியை சமீபத்தில் ஜெஸி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

கடமை உணர்ச்சி உள்ள தந்தை

கடமை உணர்ச்சி உள்ள தந்தை

இந்த நிலையில் அஜய் கிருஷ்ணா தன்னுடைய குட்டி மகனை தாலாட்டி தூங்க வைத்திருக்கிறார். அந்த வீடியோவை அவருக்கே தெரியாமல் ஜெஸி எடுத்து அதை தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்து அந்த வீடியோவிற்கு கடமை உணர்ச்சி உள்ள ஒரு தந்தை என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். தற்போது அது அதிகமாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+