Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

250 திருமணங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறோம்! போலீஸ் ஸ்டேஷனில் விவாதம்- சூர்யா உருக்கமான பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா, தனது படத்திற்காக எந்த எல்லைக்கும் சென்று உழைப்பவர். நடிப்பு அரக்கன் பட்டியலில், கமல்ஹாசனுக்கு அடுத்து சூர்யாவின் பெயர் நிச்சயம் இடம்பெறும். 'கங்குவா' போன்ற படத்திற்காக இரண்டு வருடங்கள் அயராது உழைத்தாலும், சில சமயங்களில், வெற்றி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. இருப்பினும், அவர் தனது உழைப்பை ஒருபோதும் குறைத்துக்கொள்வதில்லை.

Suriya Agaram Foundation

சமூகப் பணிகள்

சினிமா வாழ்க்கை ஒருபுறம் இருக்க, சூர்யா, தனது சமூக அக்கறையினால் மக்கள் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். தான் சம்பாதித்த பணத்தின் மூலம், கிராமப்புறங்களில் உள்ள ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்கி வரும் 'அகரம்' அறக்கட்டளை பற்றிப் பேசியது, பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

4,000 மாணவர்கள்

கடந்த பத்து வருடங்களாக, சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர், தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து, 'அகரம்' அறக்கட்டளை மூலம், 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, மேற்படிப்புக்கு வசதி இல்லாத மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் கனவுகளைப் பூர்த்தி செய்து வருகிறார்கள். இதுவரை, 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சூர்யாவால் பயனடைந்து, டாக்டர், இன்ஜினியர் எனப் பல துறைகளில் சாதித்து, பல குடும்பங்களின் பொருளாதார நிலையை மாற்றியிருக்கிறார்கள்.

மாணவர்களின் பங்களிப்பு

அகரம் அறக்கட்டளையால் பயனடைந்த மாணவர்கள், தற்போது தங்களால் முடிந்த சிறு தொகையை, அகரம் அறக்கட்டளைக்கு வழங்கி வருகிறார்கள். அந்தப் பணம், மேலும் பல மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுகிறது. சமீபத்தில் நடந்த அகரம் விழாவில் அகரம் பவுண்டேஷன் மூலமாக வாழ்க்கையில் வெற்றி பெற்ற பலர் தன்னம்பிக்கையுடன் பேசியது சூர்யா மற்றும் அவருடைய குடும்பத்தின் மீது நல்லா அபிப்பிராயத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது.

250 திருமணங்களை நிறுத்தி இருக்கிறோம்

சூர்யாவின் பேட்டி: சமீபத்தில் ஒரு பேட்டியில், சூர்யா, "நாங்கள் இதுவரை 250-க்கும் மேற்பட்ட திருமணங்களை நிறுத்தி இருக்கிறோம்," என்று கூறினார். "கிராமப்புறங்களில், 12-ம் வகுப்பு முடித்தவுடன், அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். ஆனால், அந்தப் பிள்ளைகள் படிக்க ஆசையுடன் இருப்பார்கள். அவர்களைப் படிக்க வைக்க, திரும்ப கூட்டி வர, நாங்கள் நிறைய போலீஸ் ஸ்டேஷன்களுக்குச் சென்றிருக்கிறோம்," என்று அவர் கூறினார்.

சமூகத்தின் பாராட்டு

ஒரு நடிகராக, நடித்தோம், சம்பாதித்தோம் என்று கடமைக்கு இல்லாமல், சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் சூர்யாவிற்கு, மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. அடுத்தடுத்த படங்கள் அவருக்கு ஹிட் படங்களாக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Suriya Agaram Foundation

அகரம் விழாவில் மாணவர்கள்

'அகரம்' அறக்கட்டளையின் விழாவில், பல மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஒரு மாணவர், "அகரம் அறக்கட்டளை இல்லையென்றால், நான் ஒரு டாக்டர் ஆகி இருக்க முடியாது. எனது குடும்பம், இன்று பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பதற்கு, அகரம் அறக்கட்டளையும், சூர்யா அண்ணாவும் தான் காரணம்," என்று உருக்கத்துடன் பேசினார்.

மற்றொரு மாணவி, "நான் படித்து, என் கிராமத்தில் உள்ள மற்ற பெண்களுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லப் போகிறேன். இது, நான் சூர்யா அண்ணாவுக்கு கொடுக்கும் ஒரு சிறிய நன்றி," என்று கூறினார். சினிமா உலகில் ஒரு நடிகராகவும், சமூகத்தில் ஒரு மனிதராகவும், சூர்யா, தனது ரசிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+