அரவிந்த்சாமி நடந்து கொண்ட விதம்.. சொல்ல வார்த்தை இல்லை.. எமோஷனலான சன் டிவி சீரியல் நடிகை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் நடிகை சுவாதி கொண்டே கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த மெய்யழகன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருக்கிறார். அப்போது சூட்டிங் ஸ்பாட்டில் அரவிந்த் சாமி தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து பேட்டி ஒன்றில் சுவாதிகா பேசியிருக்கிறார்.
ஒரு சில நடிகைகள் சீரியலில் அறிமுகமாகி திரைப்படங்களிலும் பெரிய அளவில் பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் தமிழில் பிரபலமான சுவாதி கொண்டே அதை தொடர்ந்து சன் டிவியில் மூன்று முடிச்சு என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு நடிகர் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மெய்யழகன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. இந்த திரைப்படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து பேட்டிகளில் பேசியிருக்கிறார். அப்போது நானும் அரவிந்த் சுவாமியும் நடித்த காட்சிகள் திரையில் பார்க்கும்போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.
நான் சின்ன வயசிலிருந்து அரவிந்த்சாமியின் ரசிகை ஆனால் அவரை சூட்டிங் ஸ்பாட்டில் பக்கத்தில் பார்த்த போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அவர் ரொம்பவே கலராக இருந்தார். அவருடைய கலரை பார்த்து நான் பிரமித்து போய்விட்டேன். இப்படி இருப்பாங்களா? என்று நினைத்தேன். அதற்கு பிறகு அவரோடு காட்சிகள் வந்தது. அவரை நான் கட்டிபிடிப்பது போன்ற காட்சிகள் இருந்தது.
ஆனால் என்னால் அவரை கட்டிப்பிடிக்க முடியவில்லை. நான் பதட்டத்தோடு இருந்ததை பார்த்து அரவிந்த்சாமி என்னிடம் இயல்பாக இருங்கள். இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என்று சொல்லிக் கொடுத்தார். எனக்கு அது சந்தோஷமாக இருந்தது. அப்போது சீரியலில் நம்மோடு நடிப்பவர்கள் நமக்கு ஒரு கம்ஃபர்ட் கொடுப்பது போல தான் அரவிந்த்சாமி எனக்கு கொடுத்தார். அவரை இதற்கு முன்பு நான் பார்த்தது கூட கிடையாது. ஆனால் ஏதோ பல வருடம் பந்தம் இருப்பது போல அவர் நடந்து கொண்டார்.
அவரைப் பார்த்தபோது என் மனதிற்குள் இருந்த சந்தோஷத்தை சொல்லுவதற்கு வார்த்தையே இல்லை என்று சுவாதி கொண்டே பேசியிருக்கிறார். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மெய்யழகன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் முழுக்க உறவுகளின் அன்பை சொல்லும் விதமாகத்தான் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. சமீப காலமாக திரைப்படங்களில் அதிகமாக வன்முறைகள் தெறித்துக் கொண்டிருக்கிறது.
ரத்தம்,கத்தி, துப்பாக்கி சத்தம் இல்லாத திரைப்படங்கள் இருக்கா என்று விரல் விட்டு எண்ணும் வகையில் தமிழ் சினிமா போய்க்கொண்டிருக்கும் நிலையில் மெய்யழகன் திரைப்படம் குடும்பத்தினரை வெகுவாக கவர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்த சீரியல் நடிகை சுவாதிகா பேட்டி இப்போது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications