தமிழும் சரஸ்வதியும்: மீண்டும் மாறிய ராகினி.. சந்தோஷத்தில் அர்ஜுனை அவமானப்படுத்தும் தமிழ் குடும்பம்
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அக்டோபர் 18ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ராகினி தமிழ் குடும்பத்திற்கு உதவுவதற்காக பணத்தோடு வந்த நிலையில் அதை தமிழ் வாங்க மறுத்ததால் ராகினி மீண்டும் கோதை குடும்பத்தின் மீது கோபப்படுகிறார்.

அதே நேரத்தில் தமிழை அவமானப்படுத்த வேண்டும் என்று அர்ஜுன் தமிழ் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் கடைசியில் அவருக்கே அவமானம் கிடைக்கிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அர்ஜுன் தமிழை அவமானப்படுத்துவதற்காக தமிழ் வீட்டிற்கு வந்து உங்களுக்கு நான் பணத்தை பிச்சையாக போடுகிறேன் என்று ஆணவமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு சில சின்ன கம்பெனி முதலாளிகள் வந்து தமிழ் கட்ட வேண்டிய 40 லட்சம் ரூபாய் பணத்தை அவர்கள் கட்டி விட்டதாகவும், அதோடு நீங்க எங்களுக்கு எவ்வளவு நல்லது செய்து இருக்கீங்க. உங்க கஷ்டத்துல நாங்க எப்படி பங்கு கொள்ளாமல் இருக்க முடியும் என்று பேச அதை கேட்டு அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.
அப்போது அங்கு நிற்கும் அர்ஜுனிடம் சரஸ்வதி இப்ப பேசுடா, என்ன அமைதி ஆகிட்டா என்று நக்கல் அடிக்க, அதற்கு கோதையும் கெட்டவங்க மட்டுமே எப்போதும் ஜெயிச்சுகிட்டு இருக்காப்பாங்கனு என்று நினைக்காத, நல்லவங்களை கடவுள் எப்போதும் கைவிட மாட்டார் என்று சொல்கிறார். அதுபோல தமிழும் அர்ஜுனை திட்டி அனுப்புகிறார். இதை தொடர்ந்து அடுத்த நாள் காலையில் ராகினி அர்ஜுனின் அக்காவோடு வாக்கிங் போய்க் கொண்டிருக்கிறார். அப்போது அதே தெருவில் நடேசனும் கோதையும் வருகின்றனர்.
அப்போது கோதை ராகினியிடம் பேசப்போக அதற்கு ராகினி நான் உங்ககிட்ட பேச விரும்பல என்று திட்டி விடுகிறார். அதற்கு அர்ஜுனின் அக்கா அவா தான் உங்ககிட்ட பேசலன்னு சொல்லுரா இல்ல எதற்காக தொந்தரவு பண்றீங்க என்று திட்ட அங்கிருந்து கோதை கிளம்ப போகிறார். அப்போது ராகினி கால் சருக்கி கீழே விழ போக கோதை ஓடி சென்று ராகினியை பிடித்து காப்பாற்றுகிறார்.
அப்போது ராகினி நான் வேணாம்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க தானே அப்புறம் எதுக்கு வரிங்க என்று தீட்டி அனுப்புகிறார். அதை பார்த்த நடேசன் அவ தான் தெரியாத மாதிரி போனா இல்ல அப்புறம் எதுக்கு நீ அங்க போனா? என்று திட்டுகிறார். அதைத் தொடர்ந்து இருவரும் ஜோதிடரை பார்க்க போகின்றனர். அப்போது அவர் தமிழுக்கு நல்லது நடக்கப்போகிறது. ஆனால் ராகினிக்கு உயிருக்கே ஆபத்து இருக்கிறது. உங்க பொண்ணை ஜாக்கிரதையா இருக்க சொல்லுங்க என்று சொல்கிறார்.
அதே நேரத்தில் பணம் கட்டியும் மிஷின்கள் எதுவும் ரெடி ஆகாததால் வேலை இன்னும் தொடங்காமல் இருக்கிறது. வேலை தொடங்க இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று கார்த்திக் சொன்னதால் தமிழ் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு உமாபதி வந்து ஒரு ஐடியா கொடுக்கிறார். அவருடைய நண்பர் ஒருவரின் கம்பெனி சும்மாதான் இருக்கிறது.
ஒரு வாரத்திற்கு அதை வாடகைக்கு எடுத்து நம்ம எல்லாத்தையும் பண்ணுவோம் என்று சொல்கிறார். அதற்கு தமிழ் நல்ல ஐடியாவா இருக்கே என்று சொல்ல, ஆனால் அவர் இன்று மாலை பாரினுக்கு போய்விடுவார். அதனால் அதற்குள் அவரை போய் சந்திக்க வேண்டும் என்று சொல்ல தமிழும் நான் போய் பார்க்கிறேன் என்று சொல்கிறார். அதே நேரத்தில் ராகினிக்கு கோதை போன் செய்து உடம்பை பாத்துக்கோ, மாடிப்படி ஏறாத என்று அட்வைஸ் பண்ணுகிறார். அதற்கு ராகினி என் மேல எந்த அக்கறையும் தேவையில்லை என்று திட்டி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அக்டோபர் 18ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ராகினி தமிழ் குடும்பத்திற்கு உதவுவதற்காக பணத்தோடு வந்த நிலையில் அதை தமிழ் வாங்க மறுத்ததால் ராகினி மீண்டும் கோதை குடும்பத்தின் மீது கோபப்படுகிறார்
அதே நேரத்தில் தமிழை அவமானப்படுத்த வேண்டும் என்று அர்ஜுன் தமிழ் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் கடைசியில் அவருக்கே அவமானம் கிடைக்கிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அர்ஜுன் தமிழை அவமானப்படுத்துவதற்காக தமிழ் வீட்டிற்கு வந்து உங்களுக்கு நான் பணத்தை பிச்சையாக போடுகிறேன் என்று ஆணவமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு சில சின்ன கம்பெனி முதலாளிகள் வந்து தமிழ் கட்ட வேண்டிய 40 லட்சம் ரூபாய் பணத்தை அவர்கள் கட்டி விட்டதாகவும், அதோடு நீங்க எங்களுக்கு எவ்வளவு நல்லது செய்து இருக்கீங்க. உங்க கஷ்டத்துல நாங்க எப்படி பங்கு கொள்ளாமல் இருக்க முடியும் என்று பேச அதை கேட்டு அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.
அப்போது அங்கு நிற்கும் அர்ஜுனிடம் சரஸ்வதி இப்ப பேசுடா, என்ன அமைதி ஆகிட்டா என்று நக்கல் அடிக்க, அதற்கு கோதையும் கெட்டவங்க மட்டுமே எப்போதும் ஜெயிச்சுகிட்டு இருக்காப்பாங்கனு என்று நினைக்காத, நல்லவங்களை கடவுள் எப்போதும் கைவிட மாட்டார் என்று சொல்கிறார். அதுபோல தமிழும் அர்ஜுனை திட்டி அனுப்புகிறார். இதை தொடர்ந்து அடுத்த நாள் காலையில் ராகினி அர்ஜுனின் அக்காவோடு வாக்கிங் போய்க் கொண்டிருக்கிறார். அப்போது அதே தெருவில் நடேசனும் கோதையும் வருகின்றனர்.
அப்போது கோதை ராகினியிடம் பேசப்போக அதற்கு ராகினி நான் உங்ககிட்ட பேச விரும்பல என்று திட்டி விடுகிறார். அதற்கு அர்ஜுனின் அக்கா அவா தான் உங்ககிட்ட பேசலன்னு சொல்லுரா இல்ல எதற்காக தொந்தரவு பண்றீங்க என்று திட்ட அங்கிருந்து கோதை கிளம்ப போகிறார். அப்போது ராகினி கால் சருக்கி கீழே விழ போக கோதை ஓடி சென்று ராகினியை பிடித்து காப்பாற்றுகிறார்.
அப்போது ராகினி நான் வேணாம்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க தானே அப்புறம் எதுக்கு வரிங்க என்று தீட்டி அனுப்புகிறார். அதை பார்த்த நடேசன் அவ தான் தெரியாத மாதிரி போனா இல்ல அப்புறம் எதுக்கு நீ அங்க போனா? என்று திட்டுகிறார். அதைத் தொடர்ந்து இருவரும் ஜோதிடரை பார்க்க போகின்றனர். அப்போது அவர் தமிழுக்கு நல்லது நடக்கப்போகிறது. ஆனால் ராகினிக்கு உயிருக்கே ஆபத்து இருக்கிறது. உங்க பொண்ணை ஜாக்கிரதையா இருக்க சொல்லுங்க என்று சொல்கிறார்.
அதே நேரத்தில் பணம் கட்டியும் மிஷின்கள் எதுவும் ரெடி ஆகாததால் வேலை இன்னும் தொடங்காமல் இருக்கிறது. வேலை தொடங்க இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று கார்த்திக் சொன்னதால் தமிழ் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு உமாபதி வந்து ஒரு ஐடியா கொடுக்கிறார். அவருடைய நண்பர் ஒருவரின் கம்பெனி சும்மாதான் இருக்கிறது.
ஒரு வாரத்திற்கு அதை வாடகைக்கு எடுத்து நம்ம எல்லாத்தையும் பண்ணுவோம் என்று சொல்கிறார். அதற்கு தமிழ் நல்ல ஐடியாவா இருக்கே என்று சொல்ல, ஆனால் அவர் இன்று மாலை பாரினுக்கு போய்விடுவார். அதனால் அதற்குள் அவரை போய் சந்திக்க வேண்டும் என்று சொல்ல தமிழும் நான் போய் பார்க்கிறேன் என்று சொல்கிறார். அதே நேரத்தில் ராகினிக்கு கோதை போன் செய்து உடம்பை பாத்துக்கோ, மாடிப்படி ஏறாத என்று அட்வைஸ் பண்ணுகிறார். அதற்கு ராகினி என் மேல எந்த அக்கறையும் தேவையில்லை என்று திட்டி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications