பிக் பாஸ் அல்டிமேட்: தாமரைக்கே டப் கொடுத்த பாலாஜி...வேற லெவல் பதிலைக் கேட்டு கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: தாமரைக் கேட்ட கேள்விக்கு பாலாஜி முருகதாஸ் சொன்ன பதில் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
ஆரம்பத்திலேயே இவ்வளவு உசாரா இருக்காரே பாலாஜி என்று அவருடைய ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.
ரசிகர்களிடம் பாலாஜி முருகதாஸ் வைத்த வேண்டுகோள்..அப்போ அது உண்மைதானா
அடித்தளமிட்டது அந்த நிகழ்ச்சி தான்
தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் எதார்த்தமாக செய்யும் செயல்கள் கூட பல நேரங்களில் ரசிகர்களை கவர்ந்து விடுகிறது. இந்த நிகழ்ச்சி முதல் முறையாக தற்போது தான் தொடங்கப்பட்டு இருந்தாலும், இதற்கு அடித்தளமிட்டது விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிதான் என்பது அனைவருக்கும் தெரியும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்ப படுவதால் அங்கே என்ன நடக்கிறது என்று தெரியவில்லையே என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டதாலேயே இந்த இருபத்தி நான்கு மணி நேர அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
நாலாவது சீசன் பாலாஜி முருகதாஸ்
ஒவ்வொரு சீசனிலும் வேற லெவலில பர்பாமன்ஸ் பண்ணி ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்களை பார்த்து செலக்ட் பண்ணி இந்த போட்டி அல்டிமேட் நிகழ்ச்சிகள் மொத்தமாக களம் இறக்கி இருக்கின்றனர். ஒவ்வொரு சீசனிலும் ஒருசிலர் மட்டுமே இருந்த நிலையில் அவர்களால் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட சுவாரசியம் தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் அள்ள போகிறது என்று அனைவரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நான்காவது சீசனின் போட்டியாளராக கலந்துகொண்ட பாலாஜி முருகதாஸ் தாமரைச்செல்வி இடம் பேசிய எபிசோடு ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
தாமரைச் செல்வியின் கேள்வி
ஏற்கனவே தான் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரீஎண்ட்ரி கொடுத்து இருந்தாலும் வந்த முதல் நாளே தன்னுடைய வேலையை தொடங்கி இங்கே யாரும் வரக்கூடாது என்று சொன்ன இடத்தில் அசால்டாக முதலாகச் என்று ரூல்ஸ் பிரேக் செய்த பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தாலும் தாமரைச்செல்வி அவரிடம் உன்னை பற்றி எனக்கு எதுவும் தெரியாது தம்பி அதனால் உன்னைப் பற்றி ஏதாவது சொல்லு என்று பாலாவை பற்றி தெரிந்து கொள்வதற்காக கேள்வி கேட்டிருக்கிறார்.
Recommended Video
உஷாராகிய பாலாஜி முருகதாஸ்
ஆனால் பாலாஜி முருகதாஸ் தற்போது நடந்து முடிந்த ஐந்தாவது சீசனை நன்றாக பார்த்துவிட்டு தான் வந்திருப்பார் போல, அதனால்தான் தாமரைச் செல்வியின் கேள்விக்கு அசால்டாக வேண்டாம் அக்கா, நான் வாயை திறந்தாலே பிரச்சனை தான் வரும் என்று ஆரம்பத்திலேயே உஷாராக நழுவி விட்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பொழைக்க தெரிஞ்ச பிள்ளையாக பாலாஜி இருக்கிறார் என்று கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பாலாஜிக்குள் இவ்வளவு ஒரு மாற்றமா என்று சிலர் நம்ப முடியாமலும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.