இசைவாணியை வச்சு செய்யும் போட்டியாளர்கள்...இதுதான் பழிவாங்கும் படலமா??
சென்னை: தான் வைத்திருக்கும் காயினை பயன்படுத்தி தலைவர் பதவியை பெற்றிருக்கிறார் இசைவாணி.
போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்த அபிநய் கடைசி நேரத்தில் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.
தலைவர் பதவியில் வீட்டை ஆள வேண்டுமென்று நினைத்த இசைவாணிக்கு பிக்பாஸ் ஆப்பு வைத்து விட்டது.

எதிர்பாராதது நடந்து விட்டது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கமல் சொல்வது போல தான் இந்த வார தலைவர் பதவியும் எதிர்பாராமல் நடந்திருக்கிறது. அது வரைக்கும் ஒன்றாக போட்டியாளர்களுடன் சேர்ந்து முடிவெடுத்த இசைவாணி, கடைசி நேரத்தில் தன்னுடைய சொந்த முடிவை தைரியமாக எடுத்து விட்டார். இதுவரைக்கும் இவர் எந்த முடிவையும் தைரியமாக எடுக்கவில்லை என்று இவருடைய ரசிகர்களும், போட்டியாளர்களும் இவர் மீது குறை கூறிக் கொண்டிருந்த நேரத்தில் இன்று தனக்கான நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்த முடிவு வேற லெவல்
இந்த வார வீட்டின் தலைவராக போட்டியிடும் நபர்களுக்கு போன வாரத்தில் நடந்த செண்பகமே செண்பகமே டாஸ்க் விறு விறுப்பாக இருந்தது. அவ்வளவு பெரிய போட்டியில் வெற்றி பெற்று இந்த வார தலைவர் பதவிக்கு போராடிக்கொண்டிருந்த 9 போட்டியாளர்களில் அமைதியாக இருந்து கொண்டு கடைசியில் தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக முதல்முறையாக இசைவாணி கூறியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

ரசிகர்களின் கேள்வி
ஏற்கனவே முதல் வாரத்தில் வீட்டின் மொத்த ஆளுமையும், இவரின் பக்கம் இருந்தாலும் போட்டியாளர்கள் இவருக்கு அதிகமான ஒத்துழைப்பு கொடுக்காததால், இவரால் இவருடைய பணியை சரியாக செய்ய முடியவில்லை. அதனால் மீண்டும் தனக்கான அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று இவர் நினைத்திருந்த நேரத்தில் முதல் வாரத்தில் போட்டியாளர்கள் செய்தது போலத்தான் தற்போதும் இவர் மீது செம காண்டில் இருக்கின்றனர். ஏற்கனவே இதற்கு முன்பு ஒளிபரப்பான சீசன்களில் இப்படித்தான் ஒரு சில போட்டியாளர்களை சக போட்டியாளர்கள் ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தது போலத் தான் இவருக்கும் நடந்து கொண்டிருக்கிறதா??என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

பழிவாங்கும் படலமா??
தலைவர் பதவியை இவர் காயினை யூஸ் பண்ணி பெற்றிருப்பதால் இவருக்கு சலுகைகள் கிடைக்கும் என்று நினைத்திருந்த நேரத்தில் பிக் பாஸ் வெளியிட்ட அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த வாரம் முழுக்க சர்வராக வேலை செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் சொன்னதும் சக போட்டியாளர்கள் எனர்ஜி கொடுத்தது போல ஆகிவிட்டது. அதனால் தங்களுடைய மனதில் இருக்கும் கோபத்தை எல்லாம் இசை வாணியிடம் வேலை சொல்லியே தீர்த்து வருகின்றனர் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications