வாலியின் யதார்த்தம்.. வைரமுத்து முதல்முதலாக இந்த படத்தில்தான் பாட்டு எழுதினாரா? பிரபலம் சீக்ரெட்
சென்னை: "நிழல்கள் பாடல்கள் ஹிட்டானதுமே, அதுதான் தன்னுடைய முதல் படம் என்று அந்த காலத்திலேயே சொல்ல ஆரம்பித்து விட்டார் வைரமுத்து. அப்போதே அவரது பொய் ஆரம்பமாகிவிட்டது. சூலம் படத்தில்தான் முதன்முதலில் பாடல் எழுதியது என்பது, வைரமுத்துவின் மனசாட்சிக்கும் தெரியும்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
"வாலி, வைரமுத்து இருவரையும் ஒப்பிடுவதே தவறு.. கண்ணதாசனை வைரமுத்துவுடன் கம்பேர் பண்ணணும்னு நினைக்கக்கூட கூடாது.. வாலி மிகச்சிறந்த கவிஞர்.. எல்லா வகையிலும் கவிதைகளை எழுதக்கூடியவர்..

வாலி பாடல்கள்: பிரபுதேவா நடித்திருந்த இந்து படத்தில்கூட, "எப்படி எப்படி" பாடல் மிகப்பெரிய சர்ச்சையானது.. ஆனால், வாலி எதைப்பற்றியுமே கவலைப்படவில்லை.. இருக்கிறதைதானே எழுதினேன்? இல்லாததை ஒன்றும் எழுதலியே என்பதுபோல சொல்லிவிட்டு கடந்து சென்றுவிட்டார்..
ஆனால், இலக்கியத்தை பாடல்களில் புகுத்துவார் வைரமுத்து.. போறாளே பொன்னுதாயி என்ற பாடல் பாரதிராஜாவின் படத்துக்கு தேவைப்பட்டாலும்கூட, மக்களுக்கு புரியிற மாதிரி வைரமுத்து வரிகளை எழுதல.. வாலி எப்போதுமே எளிமையாக எழுதுவார்..
நல்ல கவிஞர்: வைரமுத்து நல்ல கவிஞர்தான்.. ஆனால், அவரது தனிப்பட்ட விஷயங்கள், ஆளுமைக்குரிய விஷயமாக தெரியவில்லை. அந்த காலத்தில், பொற்காசுகளை தந்தால் அரசவை கவிஞர்கள், ராஜாவை புகழ்ந்து பாடுவார்கள். அதுபோல, காசு தருபவர்களை புகழ்ந்து பேசுவார் வைரமுத்து., குருவிக்கரம்பை சண்முகம், முத்துலிங்கம், புலமைப்பித்தன், இதுபோன்ற கவிஞர்கள் யாராவது, பிறரை புகழ்ந்து பாடியிருக்கிறார்களா? பெரிய நபர்கள் என்றால், பணத்துக்காக புகழ்ந்து பேசிடுவார் வைரமுத்து.
ஆளுமை மிக்க கவிஞர்களிடம் எப்பவுமே ஒரு கர்வம் இருக்கும். ஆனால், வைரமுத்துவிடம் அப்படியொரு கர்வம் இல்லை, அவரது கர்வம் வேறு மாதிரியாக இருக்கிறது. சிறந்த கவிஞர் கண்ணதாசன் என்று இளையராஜா மேடையொன்றில் சொன்னார், உடனே சிறந்த இசையமைப்பாளர் எம்எஸ்வி என்று வைரமுத்து போட்டிக்காக சொல்வார்.
பைரவி படம்: என் அப்பா டைரக்டர் எம் பாஸ்கர், ரஜினிகாந்த்தை முதன்முதலில் பைரவி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர்.. தன்னுடைய ஆஸ்கார் நிறுவனத்தில் "சூலம்" என்ற படத்தை எடுத்தபோது, வைரமுத்து சாரை, என் அப்பாவிடம் அறிமுகப்படுத்தினார் இளையராஜா. சமகாலத்தில் பாரதிராஜாவிடமும் அப்போது அவரை அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால் சூலம் படத்திற்காக 2 பாட்டை எழுதியதுமே, என் அப்பா, அந்த பாடல்களை கேட்டுட்டு ஓகே செய்தார்.
ஒரே நாளில் வைரமுத்து எழுதிய 2 பாடல்களுமே ரிக்கார்டிங் செய்யப்பட்டது. அந்தவகையில், தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முதலில் வைரமுத்து எழுதியது சூலம் என்ற எங்களுடைய படத்திற்காகத்தான்.. இதற்கு பிறகுதான் நிழல்கள் படத்துக்கு எழுதினார் வைரமுத்து.
நிழல்கள்: ஆனால், நிழல்கள் பாடல்கள் ஹிட்டானதுமே, அதுதான் தன்னுடைய முதல் படம் என்று அந்த காலத்திலேயே சொல்ல ஆரம்பித்து விட்டார் வைரமுத்து. அப்போதே அவரது பொய் ஆரம்பமாகிவிட்டது. இது இளையராஜா சாருக்கும் தெரியும்... சூலம் படத்தில்தான் முதன்முதலில் பாடல் எழுதியது என்பது, வைரமுத்துவின் மனசாட்சிக்கும் தெரியும்.
இளையராஜா வைரமுத்துவை ஒதுக்கியதுமே, பாடல்கள் இல்லாமல், சின்ன சின்ன இசையமைப்பாளர்களிடம் எழுதி கொண்டிருந்தார் வைரமுத்து.. அதற்கு பிறகு ஏஆர் ரஹ்மான் மிகச்சரியாக வைரமுத்துவை பயன்படுத்தினார்.
ஆனால், ஈகோ இல்லாத, ஆணவம் இல்லாத, அமைதியான, நல்ல மனிதரான ஏ.ஆர்.ரஹ்மான், எந்த காரணத்தினாலோ, இவரை பயன்படுத்தக்கூடாது என்று ஒதுக்கிவிட்டார். அப்பேர்ப்பட்ட ரஹ்மானே ஒதுக்கியிருக்கிறார்கள் என்றால், இவர்மீது ஏதோ ஒன்று தவறாக உள்ளது என்றுதானே அர்த்தம். ஆனால், வைரமுத்து, ரஹ்மான் இருவருமே அதற்கான காரணத்தை சொல்லவில்லை.
மறுப்பு எங்கே: பெண்கள் விஷயத்தில் அவரை சம்பந்தப்படுத்தி பேச நான் விரும்பவில்லை.. அது உண்மையா? பொய்யா தெரியாது. அப்படியே இருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்து மறுப்பு தரலாம்.. ஏன் அமைதியாக இருக்கிறார் எனறு தெரியவில்லை. பேட்டி எதையும் தரவேணாம். ட்விட்டரில் 2லைன் பதிவிடலாமே? அதுவரை பொதுமக்கள் பார்வையில் ஒரு சந்தேகம் இருக்கத்தானே செய்யும்?" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications