கதாநாயகியை தேடும் கே.எஸ் ரவிக்குமார்.. கூடவே நடிகை ராதிகாவும்.. அடுத்த "பாக்கியா” யார் தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் புதியதாக யார் அடுத்த கதாநாயகி என்ற நிகழ்ச்சி துவங்க உள்ளது.
அதில் நடுவர்களாக கே.எஸ் ரவிக்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் யார் அடுத்த பாக்யாவாகவும், காவியாகவும், கண்ணமாகவும் கிடைக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விஜய் டிவியில் புதிது புதிதாக நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருவது வாடிக்கைதான். ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றால் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் தொடங்குவதும் வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதல் முறையாக விஜய் டிவியில் யார் அடுத்த கதாநாயகி என்ற ஒரு நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது.
அந்த வகையில் பல நடிகர்கள், பிரபலங்கள் சினிமாவில் தங்களுக்கு வாய்ப்பு குறையும் நேரத்தில் சின்னத்திரையை நோக்கி படையெடுப்பது பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பல்முக திறமையை கொண்ட கே எஸ் ரவிக்குமார் முதல் முறையாக சின்னத்திரையில் ஒரு நடுவராக களம் இறங்குகிறார்.

விஜய் டிவியில் பாடல் நிகழ்ச்சி, டான்ஸ் நிகழ்ச்சி இருப்பது போன்று இப்போது கதாநாயகி தேடும் படலத்தை தொடங்கி இருக்கின்றனர். அதில் வரும் ஜூலை 29ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் காரில் இருந்து கே.எஸ் ரவிக்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் இறங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் அவரை வரவேற்கும் மக்கள் தொடர்ச்சியாக அவர்களிடம் எங்கள் கண்ணம்மாவை போலவோ, காவியா போலவோ, அடுத்த பாக்யா போலவோ ஒரு நபரை தேர்ந்தெடுங்கள் என்று வேண்டுகோள் வைக்கின்றனர். அதற்கு கே.எஸ் ரவிக்குமார் எந்த மாதிரி கதாநாயகி தேடுவது என்பது பெரிய வேலையாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல, ராதிகா சரத்குமார் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.

இந்த நிலையில் அதிகமான ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி வருவதற்கு முன்பு இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி வருவது நன்றாக இருக்கிறது என்றும் பலர் வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு இந்த ஒரு நிகழ்ச்சி வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என கூறி வருகின்றனர். அதே நேரத்தில் முதல் முறையாக கே.எஸ் ரவிக்குமார் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் நடுவராக வந்திருப்பதால் நிகழ்ச்சி களைக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறி வருகின்றனர்.
-
ஏமாற்றம், வலி.. அதிகமாக இருக்கிறது! உருக்கமாக போஸ்ட் போட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்! -
திரிஷா சொன்ன சொல் மாறிட்டாங்க! முன்பு மாதிரி இல்ல! இப்போ முடிவு இதுதான்! பிரபலம் ஓபன் -
நடிகர் அரசியல்வாதியாக கூடாதா? அதுவும், ஓம் சக்தி... பராசக்தி டயலாக்.. வில்லங்க கேள்விக்கு MS பாஸ்கர் பதிலடி -
நடிகர் பிரசாந்த் படத்தில் கதாநாயகியாகும் தேவயானி மகள்.. நெகிழ வைத்த அம்மா பாசம்! கனவு நிறைவேறியது -
குக் வித் கோமாளியில் 18+ காமெடி! “கொழுந்தியா” இல்லையே என உருகிய மாதம்பட்டி ரங்கராஜன்! புது பஞ்சாயத்து -
சர்ச்சைக்கு மத்தியில் உருக்கமாக பேசிய மாதம்பட்டி ரங்கராஜன்.. இதை எதிர்பார்க்கவே இல்ல.. ஆனால், நெகிழ்ச்சி வார்த்தை -
இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன் -
மாநகரம் ஸ்ரீ-யா இது? மீண்டும் பழைய நிலை, மாஸ் லுக்.. இளம் பெண்ணுடன் உருக்கமான போஸ்ட்! -
அழகே அழகு அப்டேட்: சுரேஷ் குடும்பத்திடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிர வைத்த மதி! இது பலருக்கு பாடம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
சீமானுடன் நடிக்கும் போது நடந்த சம்பவம்.. வெளிப்படையாக பேசிய நடிகை கிரித்தி ஷெட்டி! குவியும் கமெண்ட்ஸ் -
ஜல்லிக்கட்டு மட்டுமில்ல.. மதுரை கிடா சண்டையை உலகிற்கு கொண்டு வந்த மலையாள இயக்குநர்! பின்னணி நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications