Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரிகமபவில் மகள் சொன்ன வார்த்தை.. கதறி அழுத விஜே அர்ச்சனா! இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் மகள் செய்த செயலை பார்த்து விஜே அர்ச்சனா கதறி அழுகிறார். அவர் அழும் போது அங்கு நடுவராக இருந்த ஸ்வேதா உட்பட பார்வையாளர்கள் பலரும் கண்கலங்கி இருக்கிறார்கள். இந்த நெகிழ வைத்த காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொகுப்பாளினி என்று சொன்னதுமே ஒரு சிலருடைய முகம் டக்கென்று நினைவிற்கு வரும். அதில் விஜே அர்ச்சனாவும் ஒருவர். பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்து வரும் அர்ச்சனாவிற்கு சாரா என்ற ஒரு மகள் இருக்கிறார். அர்ச்சனா ஆரம்பத்தில் இருந்து சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று பல சேனல்களில் தொகுப்பாளினியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இப்போது ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

sarigamapa zee tamil VJ Archana 4

90ஸ் ரசிகர்கள் பலர் விஜே அர்ச்சனாவிற்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா கலந்து கொண்ட பிறகு அவருக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது. ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் அர்ச்சனாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு இடியென செய்தி ஒன்று வந்தது.

அதாவது அர்ச்சனா குடும்பத்திற்கு இத்தனை நாட்களாக துணையாக இருந்த அவருடைய அம்மாவின் திடீர் இறப்பு தான். அர்ச்சனாவின் சிறுவயதிலேயே அவருடைய அப்பா இறந்துவிட்டார். அதற்கு பிறகு அர்ச்சனா மற்றும் அவருடைய சகோதரியை அவருடைய அம்மா தனியாகத்தான் வளர்த்து வந்திருக்கிறார். அர்ச்சனா தொகுப்பாளினி ஆன பிறகுதான் எங்களுடைய வாழ்க்கையின் தரம் மாறியது என்று பல பேட்டிகளிலும் இவர்கள் பேசி இருக்கிறார்கள்.

sarigamapa zee tamil VJ Archana 4

அதுபோல அர்ச்சனாவின் கணவர் ராணுவத்தில் வேலை பார்ப்பதால் அர்ச்சனா மற்றும் அவருடைய மகளோடுதான் அவருடைய அம்மாவும் வாழ்ந்து வந்தார். ஆனால் கடந்த மாதத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தது. ஆபரேஷன் செய்தால் என்ன வேணாலும் நடக்கலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில் மிகுந்த தைரியத்துடன் ஆப்ரேஷனை எதிர்கொண்டு ஆபரேஷனுக்கு செல்வதற்கு முன்பு கூட வீட்டிலிருந்து போகும்போது நான் கண்டிப்பாக மீண்டும் வருவேன் என்று தன்னம்பிக்கையோடு பேசிக்கொண்டு போயிருந்தார்.

sarigamapa zee tamil VJ Archana 4

ஆனால் மருத்துவமனையில் இருக்கும் போது அர்ச்சனாவின் அம்மா இறந்துவிட்டார். இது குறித்து உருக்கமான வீடியோக்களை அர்ச்சனாவும் அவருடைய சகோதரியும் வெளியிட்டு இருந்தனர். அதுபோல அம்மா இறந்த பிறகு அம்மா குறித்து எமோஷனலான பல போஸ்டுகளை அர்ச்சனா வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியில் அர்ச்சனாவிற்க்கு அவருடைய மகள் சாரா ஒரு பரிசு கொடுத்திருக்கிறார். அதாவது அர்ச்சனாவும் அவருடைய அம்மாவும் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வரையப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தை பார்த்ததும் அர்ச்சனா கதறி அழுதிருக்கிறார்.

sarigamapa zee tamil VJ Archana 4

அப்போது அவருடைய மகள் தைரியம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அர்ச்சனா அழுது கொண்டே இருந்தார். அப்போது இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் சரண் மற்றும் ஸ்வேதா மோகன் அர்ச்சனாவிற்கு ஆறுதல் கூறியிருந்தனர். அதுபோல இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக வந்திருப்பவர்களும் அர்ச்சனா அழுவதை பார்த்து அழுது இருக்கிறார்கள். இந்த எமோஷனல் ஆன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

sarigamapa zee tamil VJ Archana 4
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+