Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூணு வருஷம் இப்படி முடியும்னு எதிர்பார்க்கல..பல பேர் இப்போ கூட இல்லை..கண் கலங்கிய நடிகர் சித்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் முடிவு குறித்து அந்த சீரியலின் கதாநாயகனாக நடித்துவரும் சித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.

இந்த சீரியலில் தனக்கு வாய்ப்பு தந்து ஆரம்பத்தில் இருந்தவர்கள் பலர் தன்னோடு இல்லை என்று வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

இந்த மூன்று வருடத்தில் நடந்த பல நிகழ்வுகள் பற்றியும் சித்து பகிர்ந்து இருக்கிறார்.

What Actor Sidhu Said About Raja Rani 2 Serial Ending

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் கதாநாயகனாக நடிகர் சித்து நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே இந்த சீரியலுக்கு முன்பு திருமணம் எனும் சீரியலில் அவருடைய காதல் மனைவியாக இருக்கும் ஸ்ரேயா அச்சனுடன் ஒன்றாக நடித்திருந்தார். முதல் சீரியலில் அதிகமான ரசிகர்களையும் கவர்ந்து இந்த ஜோடி பிரபலமாகி விட்டனர்.

திருமணம் சீரியல் முடிவுக்கு வந்ததும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனாக சித்து மாறிவிட்டார். அதே நேரத்தில் ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் நடித்துவரும் சீரியல்களும் ஒரே நேரத்தில் முடிவுக்கு வருகிறது. இது இவர்களுக்கு மட்டுமல்லாமல் இவர்களுடைய ரசிகர்களுக்கும் வருத்தமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பலர் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் மூன்று வருடங்களாக தான் நடித்து வந்த ராஜா ராணி சீரியல் முடிவது குறித்து உருக்கமாக பல வார்த்தைகளை சித்து பேசி இருக்கிறார். அதில் நான் இந்த சீரியலுக்கு அறிமுகமானது பிரவீன் பென்னட்டால் தான் அவர்தான் எனக்கே என்னுடைய திறமையை பார்த்து இந்த சீரியலை கூப்பிட்டு தந்தார். ஆனால் இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்தவர்கள் பலர் இப்போது இல்லை.

கதாநாயகி மட்டுமல்லாமல் இயக்குனர், டான்ஸ் மாஸ்டர், ஒலிப்பதிவாளர்கள் என பலர் மாறிவிட்டனர். ஆனாலும் இந்த சீரியல் புது நபர்களோடு வெற்றிகரமாகவே இத்தனை நாட்களாக தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் திடீரென்று முடிவது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது வெளியே எங்கு சென்றாலும் பலரும் சரவணன் என்று என்னை அழைப்பார்கள். எனக்கு அதிகமான ஆதரவு கொடுத்து வந்தார்கள். அது என்னை எப்போதுமே சந்தோஷமாக வைத்துக் கொண்டிருந்தது.

What Actor Sidhu Said About Raja Rani 2 Serial Ending

சீரியலில் கூட நடித்தவர்களும் அதிகமான சப்போர்ட் கொடுத்திருந்தார்கள். பல பேர் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தாலும் எங்களுடன் எப்போதும் போல பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோல ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அதில் இந்த சீரியலில் தன்னோடு நடித்தவர்கள் மற்றும் பணி புரிந்தவர்கள் அனைவரையும் பற்றியும் அறிமுகம் செய்திருக்கிறார்.

மேலும் இன்று இந்த ராஜா ராணி கடைசி நாள் சூட்டிங் முடிந்து இருக்கிறது. இதில் நிறைய மெமரி இருக்கிறது. நிறைய சந்தோஷங்களும் சண்டையும் இருக்கிறது. எங்களுக்கு இந்த மாதிரி ஒரு சக்சஸ்ஃபுல்லா இந்த சீரியல் முடிந்திருக்கிறது ரொம்ப சந்தோஷம் தான். மேலும் நான் தொடங்கும் புதிய ப்ராஜெக்டுக்கும் ரசிகர்கள் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+