Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாநதி திரைப்படம் நினைவிருக்கா? கமல் நடித்த படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன், சுகன்யா நடிப்பில் வெளியான மகாநதி திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் கமலின் மகளாக மகாநதி ஷோபனா நடித்திருந்தார்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 80களில் சினிமா டைட்டில் ஓடும்போது ஒரு பெயர் மட்டும் மனதில் தைத்துவிடும். வெளியே வந்தாலும் மறக்காது. அது ஆர்ட் டைரக்டரின் டைட்டில் கார்டு.
'கலை வி.கலை'

television kamal haasan mahanadhi


இந்தப் பெயருக்கு சொந்தக்காரர் கலை சாய் வித் சித்ராவுக்கு கொடுத்த பேட்டியில் மணிவண்ணன் 'இனி ஒரு சுதந்திரம்' கதையையே திருப்பி 'அமைதிப்படை' எடுத்ததாக சொல்லி இருந்தார். ஒரு கதையை வேறொரு படத்தில் உபயோகிப்பதை பலர் செய்திருக்கிறார்கள்.

1983ல் 'சாரம்' என்று ஒரு மலையாளப் படம் வந்தது. பி.ஏ.பக்கர் என்கிற மலையாள அவார்டு பட இயக்குனர் இந்தப்படத்தை இயக்கி இருந்தார். இதில் நாயகன் பிரேம் நஸீர் பாசக்கார தந்தை. அவரின் மகள் ப்ரீதியாக மீனா மேனன் என்கிற நடிகை நடித்தார். அம்மா இல்லாததால் ப்ரிதி தனிமையாகவே இருப்பாள். ஒரு நாள் மகள் காணாமல் போய் விடுவாள்.

தந்தை நஸீர் போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுத்து தேடுவார்கள். ஆனால் கண்டுபிடிக்கவே முடியாது. கடைசியில் தான் அவளின் தோழி மூலம் தெரியவரும். அவளுக்கு ஒரு ரௌடியோடு தொடர்பு இருந்ததும், அவர்கள் மும்பை போய் விட்டதும்.
மகளை தேடி மும்பையில் அலைவார் நஸீர். ஒரு ஹோட்டலில் அவர்கள் தங்கி இருந்ததும், வாடகை கொடுக்க முடியாமல் தப்பிப் போனதும் செய்தி தெரிய வரும்.

தேடி அலுத்துப்போன ஒரு சமயத்தில் ஒரு புத்தகக்கடையில் செக்ஸ் புத்தகம் ஒன்றில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படம் இருக்கும். அது அவர் மகள் ப்ரீதி. அதிர்ந்து போய் நஸீர் அந்த புத்தக அலுவலகம் சென்று புகைப்படக்காரரைப் பிடித்து சென்றால் கடைசியில் மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் அவள் விற்கப்பட்டது தெரியவரும்.

சிவப்பு விளக்கு பகுதியின் தெருக்களில் மகளை தேடி அலையும் போது மகளின் குரலில் பாடல் ஒலிக்க கடைசியாக தன் மகள் இருப்பிடத்தை அறிந்து நண்பன் ஒருவனின் உதவியுடன் மகளை கண்டு பிடித்து காரில் ஏற படம் முடியும். இந்தக் காட்சிகள் அப்படியே பிற்காலத்தில் ஒரு படத்தில் வந்தது. மும்பை கல்கத்தாவாக மாற்றப்பட்டது. ஆனால் இதை எடுத்தவர் இந்தப்படம் தான் இன்ஸ்பிரேஷன் எனச் சொல்லவேயில்லை.

தன் மகள் பள்ளியிலிருந்து திரும்பும் போது காணாமல் போன சில நிமிடங்களில் தோன்றிய எண்ணங்களே இப்படத்தின் கதை என ஒரு விளக்கம் சொன்னதாக ஞாபகம். ஆச்சர்யப்பட வைக்கும் ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா?. சாரம் படத்தில் மகளை மீட்க உதவும் பிம்ப் , நண்பர் கேரக்டரில் நடித்தவர் தான் பிற்காலத்தில் புதிய படத்தில் பெண்ணை கொல்கத்தாவில் விற்கும் கேரக்டரில் நடித்தவர்.

television kamal haasan mahanadhi


ஆம்...கொச்சின் ஹனீபா தான் அவர். இப்படி ஒரு படத்தின் கதை வேறொரு படத்தில் குறைத்தோ, கூட்டியோ எடுத்துக் கொள்வது பல காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு விஷயத்தை பாராட்டலாம். சாரம் படத்தில் சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து மீட்கப்படும் பெண்ணை இந்த சமுதாயம் வாழ விடுவதில்லை என வசனங்களும், க்ளைமேக்ஸில் மற்ற பெண்கள் தந்தையையும், மகளையும் பார்த்து சிரிப்பதாக இருக்கும்.

இந்த தமிழ்ப் படத்தில் மீட்கப்பட்ட பெண்ணை ஜெயில் வார்டன் மனமுவந்து தன் மகனுக்கு மணம் முடித்ததாக வரும். அந்த வகையில் இந்த உலகில் எல்லோரும் வாழ முடியும் என முடித்திருப்பார்கள். சாரம்...பின்னாளில் மகாநதி இவ்வாறு செல்வன் அன்பு என்பவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+