வருட தொடக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட மகாலட்சுமி.. நெகிழ்ச்சியான வார்த்தை..குவியும் வாழ்த்து
சென்னை: கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட விஜே மகாலட்சுமி இந்த வருடம் வருடப்பிறப்பிற்கு ரசிகர்களிடம் நெகிழ்ச்சியாக வாழ்த்து கூறியிருக்கிறார்.
தன்னுடைய வாழ்க்கை சந்தோஷத்திற்கான காரணம் பற்றி வி ஜே மகாலட்சுமி கூறியதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பாக்யாவின் உருக்கமான வார்த்தை கதறி அழுத இனியா..எழிலுக்கு கிடைத்த ஏமாற்றம்.. கடைசியில் ஆகிவிட்டதே
நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம்
விஜே மகாலட்சுமி தற்போது தொகுப்பாளராக இல்லாமல் சீரியல்களில் நடித்து வருகிறார். அதுவும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் மகாலட்சுமி வில்லி கேரக்டரில் அனைவரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவரை பார்த்த குடும்ப பெண்கள் பலர் இவரை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். அதுவெல்லாம் தன்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று இவர் அதை சந்தோஷமாக வாங்கிக் கொள்கிறார். இந்த நிலையில் தான் சமூக வலைத்தளத்தில் இவர் ட்ரெண்டிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மிரட்டிய திருமணம்
ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து ஆன மகாலட்சுமி தற்போது எளிமையாக தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒன்றரை வருடங்களாக இவர்களுடைய காதல் வாழ்க்கை வெளி உலகத்திற்கே தெரியாமல் மறைந்து வந்த நிலையில் தற்போது இவர்களுடைய திருமணம் சமூக வலைத்தளத்தில் புரட்டி போடும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எந்த பக்கம் திரும்பினாலும் இவர்களுடைய புகைப்படம் தான் அங்கே ஆக்கிரமித்து பலரையும் மிரட்டி கொண்டிருந்தது.
ட்ரெண்டிங் ஜோடி
இந்த நிலையில் தற்போது கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட பல பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தம்பதி தங்களுடைய புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியிருக்கின்றனர். ஏற்கனவே இவர் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் ஒரு சில மாதங்களாக இவர்களுடைய பேச்சு கொஞ்சம் அமைதியாக மாறி இருக்கிறது.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இதே நேரத்தில் இவர்கள், வாழ்க்கையில் எல்லாமே சாத்தியம். . கனவு காணுங்கள் மற்றும் சமாளித்துக் கொள்ளுங்கள்... எனக்கு அழகான குடும்பம் இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்... அம்மாவும் மனைவியும் எப்போதும் சத்தியமாக்கி இருக்கிறார்கள்... 2023 புத்தாண்டு வாழ்த்துக்கள்..! என்று ரவீந்தர் பதிவு வெளியிட அதில் மகாலட்சுமியை டேக் செய்திருக்கிறார். இதனாலே இவர்களுடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி லைக்குகளை அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் பலர் புத்தாண்டு வாழ்த்துகளோடு மகாலட்சுமி குழந்தைக்காக ஆசைப்பட்டு கொண்டிருப்பதால் விரைவில் அந்த மகிழ்ச்சியான செய்தியையும் கூற வேண்டும் என்று ரசிகர்கள் தங்களுடைய விருப்பங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.