டேனியல் பாலாஜி கடைசியா சொன்னது! நேற்று இரவு நடந்தது இதுதான்! கதறி அழுத உயிர் நண்பன்
சென்னை: பிரபல திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி நேற்று மாரடைப்பு காரணமாக யாரும் எதிர்பார்க்காத வகையில் மரணம் அடைந்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் நிலையில் அவருடைய நண்பர்களும் கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் டேனியல் பாலாஜியின் உயிர் நண்பர் ஒருவர் நேற்று நடந்த நிகழ்வுகள் குறித்து பேசியது பார்ப்போரை கண் கலங்க வைத்திருக்கிறது. திரைப்படங்களில் வில்லனாக எல்லோருக்கும் தெரியும் டேனியல் பாலாஜி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கதாநாயகனாக இருந்திருக்கிறார். 48 வயதான டேனியல் பாலாஜி திருமணம் செய்யாமல் இருந்த நிலையில் சமீபத்தில் அவர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் வைத்திருந்தார்.

அவர் கோவில் கட்ட தொடங்கிய பிறகு அதிகமாக பக்தியில் மூழ்கி விட்டாராம். அது குறித்து அவருடைய நண்பர் உருக்கமாக பேசி இருக்கிறார். அதில், நானும் டேனியல் பாலாஜியும் பல வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் அடிக்கடி வெளி இடங்களுக்கு சுற்றுலாவுக்கு போவோம். அவருடைய திரைப்பட சூட்டிங் நடக்கும் இடங்களுக்கும் கூட எங்களை கூட்டிக்கொண்டு போவார்.
அதுபோல புது திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும் கதையை எங்களிடமும் சொல்லி விவாதிப்பார். இந்த கதையில் நடிக்கலாம் என்று இருக்கிறேன் என்று சொல்லுவார். நாங்களும் எங்களுக்கு தோன்றுகிறதை அவரிடம் ஷேர் பண்ணுவோம். அதுபோல அவரோடு பழகுறவர்கள் எல்லாருமே எப்படி நடிக்க வேண்டும்? எப்படி சினிமாத்துறைக்குள் வரவேண்டும் என்று அவருக்கு தெரிந்த விஷயங்கள் எல்லாவற்றிலும் சொல்லித் தருவார்.
அதுபோல உதவி என்று அவரிடம் யாரு வந்தாலும் அவர்களுக்கு அள்ளிக் கொடுப்பார். பல பேருடைய படிப்புக்கு பீஸ் கட்டியிருக்கிறார். ஸ்கூல், காலேஜ் என்று இவர் பலருக்கு பீஸ் கட்டி இருக்கிறார். அதுபோல வயசானவர்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இங்கு எனக்கே அவர்தான் பிசினஸ் தொடங்கி வைத்தார். எனக்கு மட்டுமல்லாமல் என்னை போன்று பல நண்பருக்கு பிசினஸ் தொடங்கி கொடுத்திருக்கிறார்.
நாங்கள் இன்று இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறோம் என்றால் அதற்கு காரணமும் டேனியல் பாலாஜி தான். எப்போது நாங்கள் அவரிடம் ஃபோன் பண்ணினாலும் ரொம்பவே ஜாலியா பேசுவார். இப்போ கோவில் கட்டிய பிறகு முழுக்க முழுக்க அவருடைய கவனம் கோவிலிலும் ஆன்மீகத்திலும் இருக்கிறது. அதனாலேயே நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்ததை எல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
நாங்கள் அதை பற்றி கேட்டாலும் அதற்கு அவர் எனக்கு ஆன்மீகத்திலேயே தீட்சை பெற வேண்டும் என்பதுதான் ஆசை என்று சொல்லிக் கொண்டிருந்தார். நேற்று எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்ததால் நான் அவருக்கு போன் போட்டேன். அவர் போனை எடுக்கவில்லை, அதனால் மீண்டும் மீண்டும் அவருக்கு அடித்துக் கொண்டு இருந்தேன். அவர் எடுக்கவில்லை என்றதும் எனக்கு ஒரு பதட்டம் ஏற்பட்டது.
அதற்கு பிறகு அங்கிருந்தவர்களுக்கெல்லாம் ஒவ்வொருவருக்காக போன் அடித்தால் யாருமே தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். பிறகு ஒரே ஒருவர் மட்டும்தான் அண்ணனோடு இருந்திருக்கிறார். அவர் தான் டேனியல் பாலாஜியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்கிறார். எங்களுக்காக எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார். கோவிலில் வழிபாடுகள் எல்லாம் செய்து இருக்கிறார்.
ஆனால் அவருக்கு முடியாத போது நாங்கள் யாருமே அவர் பக்கத்தில் இல்லை. அவர் தனி ஆளாகத்தான் கஷ்டப்பட்டு இருக்கிறார். அந்த நேரத்தில் நாங்கள் கூட இல்லாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் எங்களுக்கு அதிகமாக இருக்கிறது. எங்கள் யாருக்காவது போன் பண்ணி இருந்தால் நாங்கள் ஓடி வந்திருப்போம். ஆனால் அவர் ஏன் அதை செய்யாமல் விட்டார் என்று தான் தெரியவில்லை என்று பேசிக் கொண்டிருக்கும்போதே அந்த நபர் அழுதிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications