அதுக்குள்ள என்ன அவசரம் பிக் பாஸ்... இப்படிக் கிளம்பிட்டாங்களே!
சென்னை: பொதுவாக எப்பவுமே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய பிறகுதான் பல பிரச்சனைகள் வரும். ஆனால் தற்போது பிக்பாஸ் தொடங்குவதற்கு முன்பே பல பிரச்சினைகளையும் அதை பற்றிய வதந்திகளும் பரவி வருகிறது.
விரைவில் தொடங்கப்பட இருக்கும் பிக் பாஸ் 4 சீசனுக்கு இப்பவே ரசிகர்களிடம் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. ஒரு திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்பு வரும் வதந்திகளும் எதிர்பார்ப்புகளும் இப்போ பிக் பாஸ்க்கும் வந்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் முதல் இதில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி யாளர்கள் வரை பல வதந்திகள் வருகிறது.
நமக்கு கவர்ச்சி செட்டாகாது.. சேலையே போதும்.. ஜொலிக்கும் நட்சத்திரா!
எப்போது தொடங்கும்
ஏற்கனவே தெலுங்கிலும் ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில் தற்போது தமிழிலும் ஆரம்பிக்கப்பட உள்ளன இருக்கிறதாம் அதனைத்தொடர்ந்து வதந்திகள் பரவ தொடங்கியிருக்கிறது. தற்போது இணைய தளத்தையே கதிகலங்க வைத்து ஒரு போட்டோவில் தன்னுடைய இடுப்பு அழகை காட்டி இணையதளத்தில் புகழின் உச்சிக்கு போன ரம்யா பாண்டியன் இதில் கலந்து கொள்வதாக செய்திகள் பரவி வருகின்றன.
இடுப்பழகி ரம்யா
ஆனால் இதைப்பற்றி அவர் இன்னமும் யாரும் இப்ப வரையிலும் டிவியிலிருந்துஎன்னிடம் பேசவில்லை என்று கூறியிருக்கிறார். இது ஒருபுறமிருக்க அவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி கலக்கிக் கொண்டிருக்கிறார்.] அவரைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அகல்யா ரவி மற்றும் டிக் டாக் பிரபலம் ஒருவரும் நடிகை சுனைனா கலந்துகொள்வதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று வைரலாக பரவி வருகிறது.
சுனைனாவும் உண்டா
ஆனால் அவர்கள் எங்களுக்கு முறையான அழைப்பு டிவியிலிருந்து இன்னும் வரவில்லை என்று கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் தெலுங்கில் செப்டம்பர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது அதேபோல தமிழிலும் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் முன்னாடி மாதிரி இல்லாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போ இனி சுத்தத்தை மையமாகக் கொண்டே நிகழ்ச்சியை நடத்துவார்கள்.
ரொம்ப ஸ்டிரிக்ட்
இந்த வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு தேர்வு செய்யப்படும் கலந்து கொள்ளும் நபர்கள் 15 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்புதான் வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த வீட்டிற்குள் டிஸ்டன்ஸ் மெயின்டைன்ஸ் பண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து எல்லா வருடமும் இந்த நாட்களுக்கு பிக்பாஸ் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தனித் தனி பெட் கொடுப்பாங்களோ
இன்னமும் இந்த நேரத்தில் அது ஒளிபரப்பாகாததால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள் கூடிய சீக்கிரத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ தனித்திரு விழித்திரு என்று கொரோனாவுக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து வருவதால் இந்த பிக் பாஸ் சீசன் நிச்சயம் படு வித்தியாசமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.. ஒரு வேளை படுக்கை வசதியை தனித் தனி ரூம்களில் கொடுத்து வித்தியாசம் காட்டுவார்களோ என்னவோ பொறுத்திருந்துதான் பார்ப்போம்.