சசிகலாவுடன் சந்திப்பு! பண்ணை வீட்டில் பரபரப்பு ஆலோசனை! ஓ.பன்னீர்செல்வம் முடிவு என்ன?
தேனி: சசிகலாவை நீங்க சந்தித்துப் பேச வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.
Recommended Video
பெரியகுளம் அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்திய நிலையில் இந்த கோரிக்கை அவருக்கு வைக்கப்பட்டுள்ளது.
தனது அழைப்பை எடப்பாடி பழனிசாமி உதாசீனப்படுத்தியதால் சசிகலாவை ஓபிஎஸ் விரைவில் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேனி மாவட்டம்
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததை அடுத்து சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் புறப்பட்டுச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வைத்து ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான், ஓ.ராஜா உள்ளிட்டோர் சசிகலாவுடனான சந்திப்பை இனியும் தாமதப் படுத்த வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தியுள்ளார்களாம்.

உதாசீனப்படுத்திவிட்டார்
அன்புச் சகோதரர் என மிகவும் மரியாதையாக எடப்பாடி பழனிசாமியை நீங்கள் குறிப்பிட்டும் அவர் அரசியல் நாகரீகம் தெரியாமல் உங்களை உதாசீனப்படுத்தி இருக்கிறார், இதனால் சசிகலாவை நீங்கள் சந்திப்பதன் மூலம் எடப்பாடி தரப்புக்கு நாம் அதிர்ச்சி கொடுக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு மனதில் தோன்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். தற்போதைய சூழலில் சசிகலாவுடனான சந்திப்பை தவிர்ப்பது நல்லதல்ல எனவும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் சகோதரர்
குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, ஓபிஎஸ் -சசிகலா சந்திப்பை எப்படியாவது நிகழ்த்தி விட வேண்டும் என முழு முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். ஆனால் அவசரம் வேண்டாம், என ஓபிஎஸ் தான் தனது சகோதரரை அமைதிப்படுத்தி வைத்திருக்கிறாராம். இதனிடையே நேற்று தேனி புறப்படுவதற்கு முன்னர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை சின்னம்மா என்று குறிப்பிட்டு இணைப்பு பற்றி பேசியது கவனிக்கத்தக்கது.

முக்கிய முடிவு
சசிகலாவை சந்திக்க வேண்டும் என ஆதரவாளர்கள் கூறுவது பற்றி வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளோடு திங்கள்கிழமைக்கு மேல் ஆலோசனை நடத்தி ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவு எடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன் -
30 ஆண்டு மரபு உடைந்தது! புதுச்சேரி, தமிழ்நாட்டிற்கு.. வேறு வேறு தேதிகளில் தேர்தல்! ஏன் இந்த மாற்றம்? -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் LIVE: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட் -
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம்? கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைத்த எடப்பாடி -
டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா? -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
முழு கண்ட்ரோல்.. இனி பவர் ஐஏஎஸ்கள் கையில்! இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்! MCC என்றால் என்ன? -
Ramadoss: "எங்களுக்கு யார் ஓட்டு போடுவா?இது சரிபட்டு வராதும்மா!" சசிகலாவுக்கு நோ சொன்ன ராமதாஸ்! -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
வடக்கே வன்னியர்..தெற்கே தேவர்! 3 பேருக்கு செக்.. அய்யா ராமதாஸை வைத்து சின்னம்மா சசிகலா போடும் கணக்கு -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'!












Click it and Unblock the Notifications