குடும்பமே கூடி பிஸிபேளா பாத் சமைக்கறாங்க.. யாருக்கு?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலுக்கு பெரிசா டயலாக் ரைட்டர்ஸ் தேவை இல்லேன்னு முடிவு பண்ணி இருப்பாங்க போல.
ஜனனியும், சந்தோஷும் ஆக்கிரமிச்சு 10 நிமிஷம் டயலாக்கே இல்லைனு சொன்னா நம்புவீங்களா? ஆஸ்ரமத்துலேர்ந்து திரும்பி வரும்போது ஜனனிக்கு அம்மை போட்டுடுது.
சந்தோஷ்தான் ஜனனியைப் பார்த்துக்கறான். வேப்பிலை போட்டு படுக்க வைக்கறது.. ஜூஸ் போட்டு கொடுக்கறது.. கஞ்சி வச்சு ஊட்டறது இது மட்டும்தான் நடக்குது. போதும்ங்க.. இது ஜனனி பேசும் வசனம்.
கொஞ்சம்தாங்க.. சாப்ட்ருங்க..இது சந்தோஷ் வசனம். இல்ல வேணாம் போதும்ங்க இது மறுபடி ஜனனி பேசும் வசனம். அதை வாங்கி வச்சிடுவான் சந்தோஷ்.
ஜனனிகிட்ட சின்ன பொண்ணு நாத்தனார் வந்து அண்ணி எப்படி இருக்கீங்கன்னு கேட்கறா.. ம்.. நல்லாருக்கேன்னு சொல்றா ஜனனி. அண்ணி இப்போ பத்திய சாப்பாடு சாப்பிட்டு, வாய் என்னவோ போல இருக்கும். என்ன புடிக்கும்னு சொல்லுங்க 5 நிமிஷத்துல நானா செய்து எடுத்துட்டு வரேன்னு சொல்றா.
என்னாது.. பஞ்சு மிட்டாய்க்கும் பட்டர் பிஸ்கட்டுக்கும் ட்ரீம் சாங்கா? அட நீங்க வேற!
பிஸிபேளாபாத் கேட்டா செய்து தருவியான்னு கேட்கறா ஜனனி. இதோ அஞ்சு நிமிஷத்துல வரேன் அண்ணின்னு .சொல்லிட்டு ஓடறா. கீழே போனா அத்தனை பேரும் ஹெல்ப் பண்ண, சந்தோஷ் ஆசையா சமைக்கறான். சாப்பிடும்போது உனக்காக உன் புருஷன் செய்திருக்கான்மான்னு மாமனார் சொல்றாங்க.
சும்மா ஒரு பார்வை பார்த்துட்டு சாப்பிடறா ஜனனி. ரெண்டு வாய் சாப்பிட்டுட்டு.. வழக்கமான தன் டயலாக்.. வேணாம் போதும்ங்கன்னு சொல்றா. தட்டுல கொஞ்சம் கூட சாதம் காலியாகலை... டெக்னீஷியன்ஸ் டைரக்டர் இதெல்லாம் கவனிக்க மாட்டீங்களா?