எதிர் நீச்சலில் ஆதிரை திருமணத்திற்கு இத்தனை மாதங்கள் ஏன்..வெளிப்படையாக பேசிய விசாலாட்சி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி கேரக்டரில் நடிகை சத்யபிரியா நடித்து வருகிறார்.
சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமணம் எதனால் பல மாதங்களாக இழுத்துக் கொண்டே இருக்கிறது என்பதை பற்றி அவர் பேசியிருக்கிறார்.
சீரியலில் இனி வரப்போகும் ட்விஸ்ட் பற்றியும் நடிகை சத்யபிரியா பேசி இருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் ஆக இருந்து வருகிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வன் பல வருடங்களுக்கு பிறகு இயக்கி வருகிறார். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விட்டார்கள்.
அந்த வகையில் இந்த சீரியலில் விசாலாட்சி கேரக்டரில் குணசேகரின் அம்மாக்காக நடிகை சத்யபிரியா நடித்து வருகிறார். நடிகை சத்யபிரியா ஏற்கனவே திருச்செல்வன் இயக்கத்தில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ஏழு வருடங்களாக கோலங்கள் சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல தற்போதும் எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய கேரக்டர் தத்ரூபமாக இருந்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு அப்பத்தா கேரக்டரில் தான் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் அப்பத்தா கேரக்டர் இரண்டு மாதம் ஆகும் என்ற போது தான் இவருக்கு விசாலாட்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவும் எனக்கு பிடித்ததாக தான் இருக்கிறது என்றும் இந்த கேரக்டரில் சில நேரங்களில் பாசிட்டிவாகவும் சில நேரங்களில் நெகட்டிவ் ஆகவும் சில நேரங்களில் ஏமாளி ஆகவும் மாறும் மனநிலையில் இருப்பதால் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

இந்த சீரியலில் ஆரம்பத்தில் அதிகமான வரவேற்பு இருந்த நிலையில் திடீரென்று ஆதிரை திருமண விஷயம் தொடங்கிய பிறகு ரசிகர்கள் வெறுக்க தொடங்கி இருக்கிறார்கள். சலிப்பு தட்ட தொடங்கிவிட்டது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, அதற்கு சத்யபிரியா ஆதிரை திருமண விஷயத்தில் அத்தனை பெரிய கதை இருக்கிறது. அதனால் தான் இத்தனை மாதங்களாக இந்த ட்ராக் போய்க் கொண்டே இருக்கிறது.
பார்ப்பவர்களுக்கு என்ன இப்படி இருக்கிறது என்று தோன்றினாலும் இதில் தான் மொத்த பிரச்சனைகளும் வர இருக்கிறது. அதுபோல இனி இந்த சீரியலில் இருக்கும் மருமகள்கள் மார்டனாக மாற இருக்கிறார்கள். இதுவரைக்கும் இருந்த இருந்து வரும் கேரக்டருக்கும் இனி இவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் கேரக்டர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். அதுவும் ஆதிரையின் திருமண விஷயத்தில் தான் இருக்கிறது. அதனால் தான் இந்த சீரியலில் ஆதிரை திருமணத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதை வரும் காலத்தில் பார்த்து புரிந்து பிறகு ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications