சீரியல் ஒளிபரப்புவதற்கு முன்பே சஞ்சீவ் விலக காரணம்..? இத்தனை பிரச்சனைகள் இருக்கிறதாம்..!?
சென்னை: நடிகை ராதிகாவின் தயாரிப்பில் விரைவில் கிழக்கு வாசல் எனும் சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த சீரியலுக்கான சூட்டிங் தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில் இதில் கதாநாயகனாக நடிகர் சஞ்சீவ் நடிக்க இருக்கிறார் என்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் திடீரென்று சஞ்சீவ் சீரியலை விட்டு விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் அடுத்தடுத்து பல சீரியல்கள் முடிவுக்கு வர இருக்கிறது. குறிப்பாக ராஜா ராணி 2 மற்றும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலுக்கு பதிலாக புது சீரியல்கள் விஜய் டிவியில் அறிமுகமாக இருக்கிறது. அதில் நடிகை ராதிகா நடித்து தயாரிக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலும் இடம் பிடித்திருக்கிறது.
நடிகை ராதிகா சில நாட்களுக்கு முன்புதான் கிழக்கு வாசல் சீரியலின் பூஜை போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார். ரசிகர்களும் அதிகமானோர் இதற்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த சீரியலில் முக்கியமான கேரக்டரில் ராதிகாவும் நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குனர் சந்திரசேகரும் இதில் நடிக்கிறார்கள் என்றும் கதாநாயகியாக ரேஷ்மா முரளிதரன் மற்றும் கதாநாயகனாக சஞ்சீவ் நடிப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் திடீரென்று சஞ்சீவ் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் என்றும் தற்போது ஒரு வாரமாக இந்த சீரியலுக்கான சூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்றும் தற்போது சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் தான் சஞ்சீவ் என்பது பலருக்கும் தெரியும்.
அதே நேரத்தில் நடிகர் விஜய் மற்றும் அவருடைய தந்தையான சந்திரசேகருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் தற்போது சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வரும் நிலையில் அதன் காரணமாக இருக்குமோ என்று ஒரு தரப்பினர் கேள்விகளை எழுப்ப, இன்னொரு தரப்பினர் இல்லை கதாநாயகி ரேஷ்மாவிற்கும் சஞ்சீவ்க்கும் ஜோடி பொருத்தம் அவ்வளவாக நல்லா இல்லை என்று ஆரம்பத்திலேயே அதிகமான மீம்ஸ்கள் வெளியாகிவிட்டது. அதன் அடிப்படையில் இந்த மாற்றம் நடந்து இருக்கலாம் என்றும் தங்களுடைய கருத்துக்களை தட்டி விடுகின்றனர்.

இந்த நிலையில் இந்த இரண்டும் இருக்க வாய்ப்பே இல்லை. இந்த சீரியலை விட்டு நான் போகிறேன் என்று இப்ப வரைக்கும் சஞ்சீவ் எந்த தகவலையும் கூறாமல் இருக்கும் நிலையில் சஞ்சீவ் இந்த சீரியலில் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அதே நேரத்தில் ஆரம்பத்தில் இவருடைய எபிசோடுகள் வராமல் கூட இருக்கலாம். அதனால் இவர் சூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என்றும் சில ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் இன்னும் சில நாட்களில் இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கிவிடும். அதன் பிறகு தெரியும் இதில் கதாநாயகன் நிஜத்தில் மாற்றப்பட்டு இருக்கிறாரா? அல்லது சஞ்சீவ் தான் கதாநாயகனா? என்று தகவல்களும் விரைவில் வெளியாகி விடும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
மதுரை முத்துவின் மகள்களுக்கு நடந்த பங்க்ஷன்.. நெகிழ வைத்த தந்தை பாசம்! வியந்து போன மதுரை மாநகரம் -
சின்னத்திரை பிரபலம் வீட்டு பங்க்ஷனில் நடிகர் ராமராஜன்.. நெகிழ வைத்த காட்சி! வியந்து போன மதுரை -
இயக்குனர் பாலு மகேந்திரா மகளுக்கு என்ன ஆச்சு? கண்கலங்கியபடி அவரே வெளியிட்ட வீடியோ! குவியும் ஆறுதல் -
“எப்போது என்ன நடக்கும்னு சொல்ல முடியாது! அது வேதனையான சம்பவம்” நடிகை பிரியங்கா மோகன் உருக்கம் -
விஜய் திரிஷாவை விடுங்க.. மாலையும் கழுத்துமாக வந்து நின்ற ரவி மோகன்- கெனிஷா! குவியும் வாழ்த்து -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம்











Click it and Unblock the Notifications