யோகி பாபுவை பாவனா அப்படி பண்ணுனது தப்பு! விஜய் படத்தில் அதை கவனிச்சீங்களா? ராதாரவி ஆதங்கம்
சென்னை: சினிமா நிகழ்ச்சிகளில், மேடைத் தொகுப்பாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்துவதுண்டு. அண்மையில், ஒரு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் யோகி பாபு மற்றும் தொகுப்பாளினி விஜே. பாவனாவுக்கு இடையே நடந்த உரையாடல், சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதில், யோகி பாபுவை பாவனா அவமதித்ததாகக் கூறி, ரசிகர்கள் அவருக்குக் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இந்தச் சம்பவம் குறித்து, மூத்த நடிகர் ராதாரவி அளித்த பேட்டி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேடையில் நடந்தது என்ன
சமீபத்தில், தயாரிப்பாளர் ரவிமோகன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவை சென்னையில் நடத்தினார். அந்த நிகழ்வை தொகுப்பாளினி பாவனா தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக யோகி பாபு கலந்துகொண்டார். அப்போது, யோகி பாபுவிடம், "நீங்கள் ஏதாவது புதிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறீர்களா?" என்று பாவனா கேள்வி கேட்க, அதற்கு யோகி பாபு, தான் நடித்துக்கொண்டிருக்கும் படங்களின் பட்டியலைத் தெரிவித்துள்ளார்.
ஆனால், பாவனா, "ஓ, நீங்கள் இரண்டு படங்களில்தான் நடிப்பதாக நினைத்தேன்" என்று கேலி செய்யும் தொனியில் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவவே, "யோகி பாபு என்றால் உங்களுக்குக் கேவலமா?", "மிக மோசமான செயல்பாடு பாவனா" என நெட்டிசன்கள், பாவனாவைக் கடுமையாக விமர்சித்தனர்.
அதேபோல ரவி மோகன் பற்றி உங்க மனதில் என்ன நினைக்கிறீங்க என்று பாவனா கேட்க, அதற்கு யோகி பாபு அவர் நல்லா இருக்குன்னு இன்னும் நிறைய படங்கள் தயாரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல, ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காதீங்க உங்க மனசுல உண்மையா என்ன நினைச்சீங்களோ அதை பத்தி சொல்லுங்க என்று பாவனா கேட்க, அதற்கு யோகி பாபு உங்க மனசுல நினைச்சதை எல்லாம் நான் நினைக்க முடியுமா? உங்க பின்னாடி தான் நான் நின்னுட்டு இருந்தேன் அப்போ கூட இவரை எல்லாம் எதுக்கு உள்ள விட்டீங்க? இவருக்கு சேர் கொடுக்காதீங்கன்னு நீங்க சொன்னது போல நான் நினைக்க முடியுமா? என்று யோகி பாபு கேட்க, அதற்கு பாவனாவின் முகம் வாடி போய் இருந்தது. ஆனாலும் சமாளித்து இருந்தார்.
ராதாரவியின் சர்கார் உதாரணம்
இந்தச் சர்ச்சை குறித்து திரைக்குரல் யூடியூப் பக்கத்திற்குப் பேட்டி அளித்த நடிகர் ராதாரவி, நடிகை பாவனாவைப் பற்றிப் பேசும்போது, "அவர் ஒரு வெற்றிகரமான நபர். ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் சகோதரி. இயற்கையாகவே செல்வம் மிக்கவர் மற்றும் ஒரு சிறந்த தொகுப்பாளினி" என்று கூறினார்.
அதே சமயம், யோகி பாபுவின் வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், "யோகி பாபுவின் வளர்ச்சியை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது" என்றார். மேலும், "யோகி பாபு தனியாக வளர்ந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். இயக்குநர்கள் தங்களது படங்களில் யோகி பாபுவை நடிக்க வைக்க மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். கதைக்கு அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் தேவையில்லை என்றாலும்கூட, அவரைப் படத்தில் இடம்பெறச் செய்ய விரும்புகிறார்கள். அந்த அளவிற்கு அவர் சினிமாவில் வளர்ந்து தனக்கென தனி ரசிகர்களை வைத்துள்ளார்" என்று ராதாரவி பாராட்டினார்.
இதற்கு உதாரணமாக, நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை ராதாரவி சுட்டிக்காட்டினார். அக்காட்சியில், யோகி பாபுவும் விஜய்யும் குடித்துக்கொண்டே ஒரு பாடலை பாடுவார்கள். இந்தக் காட்சி படத்திற்குப் பெரிய பங்களிப்பை வழங்கவில்லை என்றாலும்கூட, யோகி பாபுவின் புகழின் காரணமாகவே அது சேர்க்கப்பட்டது என்று ராதாரவி கூறினார்.
பாவனாவின் தரப்பு விளக்கம்
சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, பாவனா இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். "அது, மேடையில் நடந்த ஒரு நகைச்சுவையான உரையாடல். யோகி பாபு சாருக்கும் எனக்கும் இடையே இருந்த பழக்கத்தின் காரணமாக, அப்படிப் பேசினேன். ஆனால், அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் அவரை அவமதிக்கும் எண்ணத்தில் அவ்வாறு பேசவில்லை" என்று விளக்கமளித்துள்ளார்.
இருப்பினும், இந்த விவாதம் இன்னும் இணையத்தில் நடந்து வருகிறது. ஒரு கலைஞனின் வளர்ச்சி, ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும், சமூக வலைத்தளங்களின் எதிர்வினையையும் இது தெளிவாகக் காட்டுகிறது. யோகி பாபுவின் திறமை மற்றும் வளர்ச்சிக்கு, மூத்த நடிகர் ராதாரவியே சாட்சி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
விஜய் மானத்தை வாங்கும் அருண்ராஜ்.. சில்வர் டப்பாவையடுத்து, பூஸ்ட் பாட்டில்! தவெக ஸ்டிக்கரை பாருங்க -
பெரம்பூரில் விஜய்க்கு எதிராக விஐபி வேட்பாளர்.. திமுக பெரிய பிளான்.. லிஸ்டிலேயே இல்லையே! -
90 சீட் பேரம்? ஆதவ் அர்ஜுனா அப்படி சொன்னாரே.. இல்லவே இல்லை என திட்டவட்டமாக மறுத்த விஜய்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்?.. சிபிஐ அடுத்த ஆக்சன் என்ன? மாரிதாஸ் வைத்த பாயிண்ட்.. கவனிச்சீங்களா? -
நக்கீரன் கோபால் அப்பவே சொன்னாரே.. கரூரில் நடந்தது உண்மையில் என்ன? ட்ரோன் காட்சிகள் உண்மையா? -
பாஜகவுடன் உறவு.. புஸ்ஸி ஆனந்தை கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா.. சங்கடத்தில் சென்னை தவெக நிர்வாகிகள்! -
"விசில்" நம் தேசிய கீதம்.. மேடையில் ஓப்பனாக பேசிய ஓ.பன்னீர்செல்வம் -
வதந்திகளை நம்பாதீங்க.. மதசார்பில் உறுதி! இப்தார் விழாவில் பாஜக கூட்டணிக்கு ரெட் சிக்னல் போட்ட விஜய் -
100ஆ ஹலோ கண்ட்ரோல் ரூமா? விஜய்யின் தவெகவை பாருங்க சார்.. நள்ளிரவில் தனலட்சுமியால் அலறிய கோவை போலீஸ் -
நடிப்புக்கு டாட்டா சொன்ன விஜய்.. மலையாளத்திற்கு மாற்ற துடிக்கும் நடிகை.. ரசிகர்கள் வைக்கும் ஒரே கோரிக்கை -
சிம்பு விஜய்யை காலி பண்ணி இருப்பாரு.. ரஜினி ஒரு வார்த்தை சொன்னால் வேற மாதிரி ஆகிடும்..! பிரபலம் ஆதங்கம்












Click it and Unblock the Notifications