கெட்டி மேளம்: தியாவை கொடுமைப்படுத்தும் ஜெகன்.. கண்ணீருடன் துளசி, வெற்றிக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மோனிகா மற்றும் ஜெகன் தியாவை பிரித்து அழைத்து சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, போலீஸ் ஸ்டேஷனில் துளசி எனக்கும் தியாவுக்கும் சம்மந்தம் இல்லை என்று கையெழுத்து போட்டு கொடுத்த பின்னரும் சிவராமன், லக்ஷ்மியை வெளியே விடாமல் அலை கழிக்கின்றனர்.

பிறகு போயிட்டு லாயரோட வாங்க என்று துளசியை அனுப்ப நைட் நேரம் ஆனதால் லட்சுமி மற்றும் சிவராமன் என இருவரும் நீ எங்களை பத்தி கவலைப்படாத, வீட்டுக்கு போ மா என்று அனுப்பி வைக்கின்றனர்.
வீட்டிற்கு வந்த துளசி தனது அண்ணனிடம் உதவி கேட்க ரகுராமன் அமைதியாக இருக்கிறான், பிறகு அண்ணி மீனாவிடம் உங்க அப்பா கிட்ட கொஞ்சம் பேசி பாருங்க என்று சொல்ல ரூமுக்குள் சென்ற மீனா அப்பாவுக்கு போன் செய்ய அவர் போனை எடுக்கவில்லை.

வெளியே வந்த மீனா அப்பாவிடம் பேசிட்டேன், அவர் எல்லாத்தையும் பார்த்துப்பார் என்று பொய் சொல்லி விடுகிறாள். கொஞ்ச நேரத்தில் இன்ஸ்பெக்டர் சிவராமன், லக்ஷ்மியை வீட்டிற்கு மரியாதையோடு அழைத்து வந்து மன்னிப்பு கேட்டு விட்டு செல்கின்றனர். மேலும் பெரிய பாஸிடம் சொல்லிடுங்க என்று கிளம்பி செல்கின்றனர்.
துளசி என்னாச்சு என்று கேட்க பிளாஷ்கட்டில் இன்ஸ்பெக்டருக்கு ஒரு போன் கால் வர அவர் பதறி போய் உடனே ரிலீஸ் செய்து விடுகிறேன் என்று மன்னிப்பு கேட்டு அழைத்து வந்த விஷயம் தெரிய வருகிறது. மீனாவின் அப்பா தான் அந்த பாஸ் என நினைத்து மீனாவுக்கு நன்றி சொல்ல அவளோ குழப்பத்தில் நிற்கிறாள்.

அடுத்து குழந்தை குறித்து கேட்க துளசி கண் கலங்கி நிற்கிறாள். ரூமுக்கு சென்று குழந்தையின் போட்டோக்களை பார்த்தும் கலங்கி நிற்கிறாள். அடுத்த நாள் கோவிலுக்கு வரும் வெற்றி இன்னைக்கும் என் மனசுக்கு பிடித்த பொண்ணை கண்ணுல காட்டு ஆண்டவா என்று சொல்லி வேண்ட துளசி தியாவுக்காக வேண்டி கொள்ள கோவிலுக்கு வருகிறாள்.

அப்போது வெற்றி துளசியை பார்த்து சந்தோசப்பட்டு கண்ணை மூடி கடவுளுக்கு நன்றி சொல்லி கண் திறக்க துளசி காணாமல் போக வெற்றி அவளை தேடி அலைகிறான். மறுபக்கம் ஜெகன் மற்றும் அவனது அம்மா என இருவரும் சேர்ந்து மோனிகாவின் மனதை மாற்றி தியாவை வீட்டு வேலை செய்ய வைத்து கொடுமைப்படுத்த தொடங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications