ஒரே நேரத்தில் முடிவுக்கு வரும் 2 ஜீ தமிழ் சீரியல்கள் - வெளிவந்த ஷாக் தகவல்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் ஜீ தமிழ் சீரியல்களுக்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் சேனல் நிர்வாகமும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களத்தில் இறக்கி வருகிறது.

சமீபத்தில் மீனாட்சி பொண்ணுங்க தொடர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து மதிய வேளையில் இரண்டு சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஆமாம், மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்திரா சீரியல் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சீரியலில் அக்ஷய் கமல், பௌசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அதே போல் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சண்டக்கோழி சீரியலும் ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நியாஸ் மற்றும் ரியா விஸ்வநாதன் ஆகியோர் இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மதன் சமீபத்தில் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு சீரியல்களுக்கு பதிலாக விரைவில் புத்தம் புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications