விஜய் டிவி சீரியல் நடிகைக்கு சோதனை! மீண்டும் மீண்டும் இப்படியா நடக்கணும்? முடிவுக்கு வரும் சீரியல்
சென்னை: ஜீ தமிழில் நடிகை ரேஷ்மா முரளிதரன் நடிக்கும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் இன்றுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கி ஆறு மாதம்தான் ஆகிறது. அதற்குள் முடிவுக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்பு எல்லாம் சீரியல்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும் தான் பார்ப்பார்கள். ஆனால் இப்போது அப்படி கிடையாது இணையத்தில் எப்போதும் சீரியல் பார்க்கலாம் என்பதால் ஆண்களும் சீரியல் பார்க்க தொடங்கி விட்டார்கள். அதேபோல சீரியலை ட்ரோல் செய்ய வேண்டும் என்பதற்காக கூட சிலர் பார்த்து வருகிறார்கள்.

அதனாலயே நாளுக்கு நாள் சீரியல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எப்படியாவது டிஆர்பியை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக சீரியலில் லாஜிக்கே இல்லாமல் கூட சிலர் கதை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சில சீரியல்கள் வந்த வேகத்திலேயே எதிர்பார்க்காத விதமாக முடிவுக்கு வந்து விடுகிறது.
அந்த வகையில் தான் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலும் முடிவுக்கு வருகிறது. இந்த சீரியல் ஏற்கனவே 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றான உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலின் ரீமேக் தான். இந்த சீரியலில் கதாநாயகியாக ரேஷ்மா முரளிதரன் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ரேஷ்மா முரளிதரன் ஜீ தமிழில் டான்ஸ் நிகழ்ச்சியில் தான் முதன் முதலில் அறிமுகமானார். அந்த நிகழ்ச்சியில் அவர் இருக்கும்போது அவருக்கு பூவே பூச்சூடவா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து அபி டெய்லர் போன்ற சீரியல்களிலும் நடித்து வந்தார். அந்த நேரத்தில் தான் சீரியல் நடிகராகவும், தொகுப்பாளராகவுமான மதன் பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியன் இருவரும் ஜோடியாக தான் அபி டெய்லர் சீரியலில் நடித்தனர். அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கிழக்கு வாசல் சீரியலில் நடித்திருந்தார். ஆனால் அந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் ஜீ தமிழில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலும் முடிவுக்கு வருகிறது.

இதை எதிர்பார்க்காத ரசிகர்கள் ஏன் இந்த திடீர் முடிவு என்று வருத்தத்தோடு இணையத்தில் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். ஆனால் டிஆர்பி ரேட்டிங் குறைவாக பெற்றதுதான் இந்த சீரியல் முடிவுக்கு காரணமா? என்ற கேள்விகளும் எழும்பி வருகிறது. நடிகர் ஜெய் ஆகாஷ் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். இப்போது அவர் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியல் பெரிய எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் திடீரென்று முடிவுக்கு வருவதும் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications