நிலச்சரிவு ஏற்பட்ட இடம் எப்படி இருக்கு? வயநாடு களத்தில் இருந்து ‛ஒன்இந்தியா’ எடுத்த ட்ரோன் வீடியோ
திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். தற்போது அங்கு மீட்பு பணி நடந்து வரும் நிலையில் நிலச்சரிவில் சிக்கிய கிராமங்களின் தற்போதைய நிலையை ‛ஒன்இந்தியா' களத்தில் இருந்து ட்ரோன் மூலம் பிரத்யேகமாக வீடியோ எடுத்துள்ளது.
‛கடவுளின் தேசம்' என அழைக்கப்படும் கேரளா தற்போது பெரும் பேரிடரை சந்தித்துள்ளது. அங்கு இயற்கை எழில் சூழ்ந்த வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளன. கடந்த சில நாட்களாக அங்கு பெய்து வந்த கனமழையால் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 கிராமங்களும் தடம் தெரியாமல் அழிந்துள்ளன. வீடுகள் சேதமான நிலையில் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்துள்ளனர்.

இன்று மாலை 5 மணி நிலவரப்படி 205 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 200க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது அவர்களை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு சென்று களநிலவரம் குறித்து ட்ரோன் வீடியோவை ‛ஒன் இந்தியா' நேரடியாக பதிவு செய்துள்ளார். கீழே உள்ள அந்த வீடியோவில் கனமழை + நிலச்சரிவில் தடம் தெரியாமல் போன கிராமத்தின் சோகவடு தெரிகிறது.












Click it and Unblock the Notifications