21 பேர் கோடீஸ்வரர் ஆகப்போறாங்க! படுஜோராக நடக்கும் கேரளா லாட்டரி சேல்ஸ்!எந்த மாவட்டம் டாப் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் 12 நாட்களே குலுக்குலுக்கு இருப்பதால் கேரளாவில் லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள். எந்த மாவட்டம் விற்பனையில் முதலிடம் என்ற விவரமும் வெளியாகியுள்ளது.

கேரளாவில் லாட்டரிக்கு சட்டப்பூர்வ அனுமதி இருக்கிறது. அம்மாநிலத்தில் தினசரி லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. அது மட்டும் இன்றி வருடத்திற்கு ஆறு பம்பர் குலுக்கல்களும் நடைபெறுகிறது. இதில் முதல் பரிசாக ஓணம் பம்பர் லாட்டரிக்கு ரூ.25 கோடி வழங்கப்படுகிறது. ஒரே பாட்டில் கோடீஸ்வரர் ஆகிவிடுவது போல லாட்டரியால் நமக்கும் கோடிகள் கொட்டாதா? என்ற ஆசையால் கேரளாவில் லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடியும்.

kerala lottery lottery prize

லாட்டரியில் ஒரு சிலருக்கு பணம் அடிக்க பலரும் லாட்டரி வாங்கி பணத்தை இழந்ததுதான் மிச்சம் என்றாலும், என்றாவது ஒருநாள் அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? என்ற ஆசையில் லாட்டரியை பலரும் வாங்குவதை பார்க்க முடிகிறது. தமிழ்நாடு, கர்நாடகா போன்ற அண்டை மாநிலத்தில் உள்ளவர்கள் கேரளாவிற்கு சென்றாலும் கூட ஒரு சிலர் லாட்டரி டிக்கெட்டுகளை ஆசையுடன் வாங்குவதையும் பார்க்க முடிகிறது.

kerala lottery lottery prize

ஒரு சில நேரங்களில் வெளி மாநிலத்தவர்களுக்கு கூட பரிசுத்தொகை அடிக்கிறது. கேரளாவில் தற்போது கிறிஸ்துமஸ் நியூ பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. ரூ 400 விலை கொண்ட இந்த லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி வழங்கப்படுகிறது. அது போக ரூ.1 கோடி தலா 20 பேருக்கு வழங்கப்படுகிறது. 21 பேரை கோடீஸ்வரர் ஆக்கப்போகும் கிறிஸ்துமஸ் நியூ பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.

லாட்டரி விற்பனை தொடங்கியதில் இருந்தே மின்னல் வேகத்தில் டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. குலுக்கலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் நேற்றைய நிலவரப்படி 33 லட்சத்து 78 ஆயிரத்து 990 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. 40 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகும் எனத்தெரிகிறது. இதனால் கூடுதல் டிக்கெட்டுகள் அச்சிடபடலாம் எனவும் சொல்லப்படுகிறது.

அதிகபட்சமாக பாலக்காடு மாவட்டத்தில் 6 லட்சத்து 95 ஆயிரத்து 650 டிக்கெட்டுகள் விற்றுள்ளன. திருவனந்தபுரத்தில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 290 டிக்கெட்டுகள் விற்றுள்ளன. இந்த பட்டியலில் மூன்றாவதாக திரிச்சூர் மாவட்டம் உள்ளது. திரிச்சூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 280 டிக்கெட்டுகள் விற்றுள்ளன.

கிறிஸ்துமஸ் நியூ பம்பர் லாட்டரியில் மூன்றாவது பரிசக 30 வின்னர்களுக்கு தலா ரூ.10லட்சம் அளிக்கப்படும். 4-வது பரிசாக 20 டிக்கெட்டுகளுக்கு ரூ.3 லட்சம் அளிக்கப்படும். ஐந்தாவது பரிசாக 20 பேருக்கு தலா இரண்டு லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்படும். லாட்டரி குலுக்கல் வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+