Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு சிக்கல்.. பல்லாயிரம் கோடி சொத்துகளை மறைத்துவிட்டதாக புகார்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தல் வேட்பு மனுவில், பல்லாயிரம் கோடி சொத்துகளை மறைத்து பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக இருந்து வருகிறார் சசி தரூர். எதிர்வரும் லோக்சபா தேர்தலிலும் அவரே காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக பன்யன் ரவீந்திரன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இதனால் திருவனந்தபுரம் தேர்தல் களம் கடும் போட்டியால் தகிக்கிறது.

Complaint filed against Union Minister Rajeev Chandrasekhar for filing false affidavit

பாஜக சார்பில் திருவனந்தபுரத்தில் களமிறங்கும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இதுவரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். தனது முதல் மக்களவை தேர்தலை இப்போதுதான் சந்திக்கிறார். திருச்சூர் வம்சாவளியை சேர்ந்தது ராஜீவ் சந்திரசேகரின் குடும்பம். எனவே, திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக அவரை முதல் முறையாக களமிறக்கியுள்ளது.

ராஜீவ் சந்திரசேகர் வேட்பு மனு: இந்நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராஜீவ் சந்திரசேகர். மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், 2021-22 ஆம் ஆண்டிற்கான தனது வரிக்குட்பட்ட வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே எனத் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளில் அவரது வருமானம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் கணக்கு காட்டியுள்ளார்.

ராஜீவ் சந்திரசேகர் தனது வேட்பு மனுவில் உண்மையான சொத்து மதிப்பை காட்டாமல் பல மடங்கு குறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பிலும், வாக்காளர் சார்பிலும் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

Complaint filed against Union Minister Rajeev Chandrasekhar for filing false affidavit

தேர்தல் ஆணையத்தில் புகார்: மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர் ரெஞ்சித் தாமஸ் என்பவர், அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், ராஜீவ் சந்திரசேகர் தனக்கு 36 கோடி சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார். ஆனால், அமைச்சர் தனது சொத்து அறிவிப்பில் தனது வீடு, சொகுசு கார்கள் மற்றும் தனியார் ஜெட் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளை குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில்லியனர் ராஜீவ் சந்திரசேகர்: மேலும், ராஜீவ் சந்திரசேகர் ரூ.6.3 கோடி என கணக்கு காட்டியுள்ள 4 நிறுவனங்களின் மதிப்பு மத்திய அரசின் இணையதளத்தில் ரூ.1,610 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் சந்திரசேகருக்கு சுமார் ரூ.8,000 கோடி சொத்துகள் உள்ளன. அவர் ஒரு பில்லியனர் என்பது உலகுக்கே தெரியும். சொந்தமாக விமானமும் வைத்துள்ளார். ஆனால், வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பை பல மடங்கு குறைத்துக் காட்டியிருக்கிறார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: தேர்தல் வேட்பு மனுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ராஜீவ் சந்திரசேகரின் பிரமாணப் பத்திரத்தில் அறிவிக்கப்பட்ட சொத்துக்களுக்கும் அவரது உண்மையான சொத்துக்கும் இடையே ஏராளமான முரண்பாடுகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த முரண்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் முழுமையான விசாரணை நடத்தி, தவறான பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்ததற்காக ராஜீவ் சந்திரசேகர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை இந்தத் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+