கேரளாவில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய ஓட்டல் ஓனர்.. கோழிக்கோடு வீட்டின் 2வது மாடியில் என்ன நடந்தது?
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் பகுதியில் தேவதாஸ் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் 24 வயது இளம்பெண் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஓட்டல் உரிமையாளர் தேவதாஸ், இளம் பெண்ணிடம் அத்துமீற முயன்றாராம். இதனால் ஓட்டல் உரிமையாளரிடம் இருந்து தப்பிக்க 2-வது மாடியில் இருந்து இளம்பெண் கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஓட்டல் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் பகுதியில் 42 வயதாகும் தேவதாஸ் என்பவர் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் 24 வயது இளம்பெண் ஒருவர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதற்காக ஓட்டல் அமைந்துள்ள முக்கம் அருகே ஒரு வீட்டின் மாடியில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று ஓட்டல் உரிமையாளர் தேவதாஸ் மற்றும் ஓட்டல் ஊழியர்களான ரியாஸ், சுரேஷ் ஆகிய 3 பேர் இளம்பெண் தங்கி இருந்த வீட்டின் மாடிக்கு சென்றார்களாம்.

அப்போது அங்கு இளம்பெண் தனது செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தாராம். அவர்கள் வந்ததை அறிந்த இளம்பெண், செல்போனில் வீடியோ பதிவாகும் வகையில் வைத்து விட்டு கதவை திறந்துள்ளாராம். அந்த சமயத்தில் தேவதாஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததுடன், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தாராம். இதனால் இளம்பெண் பயந்து போனதுடன், ஓட்டல் உரிமையாளரிடம் இருந்து தப்பிக்க, அவரை கீழே தள்ளி விட்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்திருக்கிறாராம்.
பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இளம் பெண், கண்ணிமைக்கும் நேரத்தில் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்து வலி தாங்க முடியாமல் துடிதுடித்தார். இதை பார்த்த தேவதாஸ் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிப்போய்விட்டார்கள். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இளம்பெண்ணை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த முக்கம் போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தேவதாசை திருச்சூர் அருகே குன்னங்குளம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி, பாலியல் அத்துமீறல் என 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த ரியாஸ், சுரேஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கேரளாவில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து இளம்பெண் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications