Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையை விடுங்க.. "அது" என்ன கவரில்? இப்படி எங்காச்சும் நடக்குமா? யார் பெற்ற மகனோ? பூரித்த உறவுகள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இதுகுறித்த கடிதம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அந்த தாத்தா.. இவருக்கு 3 வயதில் ஒரு பேரக்குழந்தை இருக்கிறான்.. சம்பவத்தன்று இந்த தாத்தா, தன்னுடைய பேரனை அழைத்துக் கொண்டு கடைக்கு போனார்..

Heart touching incident like Chennai and Do you know who wrote this Apology Letter in Kerala

அப்போது பேரனின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி திடீரென மாயமானது.. இதைப்பார்த்ததுமே தாத்தா அதிர்ச்சி அடைந்துவிட்டார்.. தன்னுடன் பேரன் இருக்கும்போது, இந்த திருட்டு சம்பவம் நடந்துவிட்டதே என்று கலங்கினார்.

தங்க செயின்: வீட்டில் தங்க செயினை கேட்டால் என்ன பதில் சொல்வது என்று பதறிப்போனார். ஆசை ஆசையாக பேரனை கடைக்கு அழைத்து வரும்போதுதான், இப்படி நடக்க வேண்டுமா? என்று கடைத்தெருவிலேயே தவியாய் தவித்தார்.

பிறகு, பேரனை கையில் பிடித்துக்கொண்டே, தங்கச்சங்கிலியை தேடி, அதே ரோட்டில் அலைந்து திரிந்தார்.. செயின் யார் திருடினார்கள் என்றே தெரியவில்லை.. இதனால், வேறுவழியில்லாமல் போலீசுக்கு சென்று புகார் தந்தார்.. தன்னுடைய வீட்டிற்கும் சென்று, நகை திருடு போனதை பற்றி கண்ணீருடன் சொன்னார்.. உடனே குடும்பத்தாரும், தாத்தாவுடன் சேர்ந்து, அந்த கடைத்தெரு பகுதிகளில் நகை திருடனையும், நகையையும் தேட துவங்கினர். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை.

திடீர் கடிதம்: இந்நிலையில், இவர்கள் வீட்டின் கிச்சன் ஜன்னலில், ஒரு கவரும், ஒரு கடிதமும் இருப்பதை கண்டுள்ளனர்.. அந்த கவரில் 55 ஆயிரம் ரூபாய் பணம் இருந்திருக்கிறது. அந்த கடிதம், தாத்தாவுக்கு எழுதப்பட்டிருந்தது.

"கடைத்தெருவில் உங்க பேரன் கழுத்திலிருந்த செயினை திருடியது நான்தான்.. ஆனால், திருடியதுமே, அந்த செயினை கொண்டுபோய் விற்றுவிட்டேன். திரும்பி வந்து பார்த்தபோது, நீங்க செயினை தேடி கண்ணீருடன் அலைந்து திரிவதை பார்த்தேன்.. என்னால் அதை தாங்கவே முடியல.. குற்ற உணர்வு என்னை வாட்டி எடுத்தது.. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

மகிழ்ச்சி: அதனால், அந்த செயினை விற்ற பணம் மொத்தம் 55 ஆயிரம் ரூபாயை, அப்படியே உங்களிடம் தந்துவிடுகிறேன்.. இந்த மன்னிப்பு கடிதத்துடன் வைத்துள்ளதை எடுத்துக் கொள்ளவும்.. என்னையும் மன்னித்துவிடுங்கள்" என்று எழுதியிருந்தது. இந்த கடிதத்தை பார்த்ததுமே குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.. அந்த தாத்தா, ஆனந்தக்கண்ணீரை வடித்து கொண்டிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையிலும் இப்படியான சம்பவம் ஒன்று நடந்தது.. கோயில் உண்டியலை திருடி, பிறகு மனம்திரும்பி, அந்த பணத்தை மறுபடியும் கோயில் உண்டியலிலேயே போட்டிருந்தார் ஒருவர். கடவுள் என்னை மன்னிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதிவைத்து போயிருந்தார். அதுபோலவே இந்த சம்பவமும் நடந்துள்ளது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+