அச்சம் தேவையில்லை.. கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்- கட்டுப்பாடுகள் அமல் ? சபரிமலை யாத்திரை?
திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில்தான் திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு, மரணங்களால் அச்சப்பட தேவையில்லை என வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரளாவில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
உலக நாடுகளில் சிலவற்றில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு, ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது கேரளாவில் மட்டும்தான் என்கின்றன மத்திய அரசின் புள்ளி விவரங்கள்.

ஒப்பீட்டு அளவில் இந்தியாவின் 90% புதிய கொரோனா பாதிப்புகள் கேரளாவில்தான் பதிவாகி இருக்கின்றன. இந்தியாவில் தற்போது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1296. கேரளா மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் மொத்தமே 470 கொரோனா பாதிப்புகள் பதிவாகின. ஆனால் தற்போதைய டிசம்பர் மாத தொடக்க 2 வாரங்களிலேயே இந்த பாதிப்பு எண்ணிக்கை 800ஐ கடந்தது.
கேரளாவில் தற்போது சபரிமலை யாத்திரைக்காக பல லட்சம் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலில் கொரோனா பரவாமல் தடுக்கவும் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த கொரோனா பாதிப்பு மிக அபாயகரமானது இல்லை; பொதுமக்கள் அச்சப்படவும் தேவை இல்லை எனவும் வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதே நேரத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துமா? அப்படியானால் தற்போதைய சபரிமலை யாத்திரையை எப்படி கேரளா அரசு ஒழுங்கு செய்யும் என்கிற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

கேரளாவில் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் குவிந்துள்ளனர். ஒருநாளைக்கு சுமார் 1 லட்சம் வரையில் பக்தர்கள் ஐயப்பனை தரிசக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் பக்தர்களின் அலைமோதும் கூட்டத்தை எதிர்பார்க்காத தேவசம் போர்டு நிர்வாகம் கடுமையாக திணறி வருவது அம்மாநிலத்தில் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் அச்சமும் சபரிமலை ஐயப்ப பக்தர்களை கலக்கமடைய வைத்துள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications