அச்சம் தேவையில்லை.. கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்- கட்டுப்பாடுகள் அமல் ? சபரிமலை யாத்திரை?
திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில்தான் திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு, மரணங்களால் அச்சப்பட தேவையில்லை என வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரளாவில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
உலக நாடுகளில் சிலவற்றில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு, ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது கேரளாவில் மட்டும்தான் என்கின்றன மத்திய அரசின் புள்ளி விவரங்கள்.

ஒப்பீட்டு அளவில் இந்தியாவின் 90% புதிய கொரோனா பாதிப்புகள் கேரளாவில்தான் பதிவாகி இருக்கின்றன. இந்தியாவில் தற்போது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1296. கேரளா மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் மொத்தமே 470 கொரோனா பாதிப்புகள் பதிவாகின. ஆனால் தற்போதைய டிசம்பர் மாத தொடக்க 2 வாரங்களிலேயே இந்த பாதிப்பு எண்ணிக்கை 800ஐ கடந்தது.
கேரளாவில் தற்போது சபரிமலை யாத்திரைக்காக பல லட்சம் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலில் கொரோனா பரவாமல் தடுக்கவும் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த கொரோனா பாதிப்பு மிக அபாயகரமானது இல்லை; பொதுமக்கள் அச்சப்படவும் தேவை இல்லை எனவும் வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதே நேரத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துமா? அப்படியானால் தற்போதைய சபரிமலை யாத்திரையை எப்படி கேரளா அரசு ஒழுங்கு செய்யும் என்கிற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

கேரளாவில் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் குவிந்துள்ளனர். ஒருநாளைக்கு சுமார் 1 லட்சம் வரையில் பக்தர்கள் ஐயப்பனை தரிசக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் பக்தர்களின் அலைமோதும் கூட்டத்தை எதிர்பார்க்காத தேவசம் போர்டு நிர்வாகம் கடுமையாக திணறி வருவது அம்மாநிலத்தில் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் அச்சமும் சபரிமலை ஐயப்ப பக்தர்களை கலக்கமடைய வைத்துள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications