Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளா குண்டு வெடிப்பு- பினராயி விஜயனுடன் அமித்ஷா ஆலோசனை- என்.ஐ.ஏ விசாரணை! கமாண்டோ படை விரைவு!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா பிரார்த்தனை கூட குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரண்மான பயங்கரவாதிகள் குறித்து மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவின் எர்ணாகுளம் களமச்சேரியில் 2,000 பேர் ஒன்று திரண்டிருந்த பிரார்த்தனை கூட்டம் இன்று நடைபெற்றது. அனைவரும் கண்ணை மூடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது திடீரென அடுத்தடுத்து பயங்கர வெடி சப்தம் கேட்டது. இதில் பிரார்த்தனை கூடமே பற்றி எரிந்தது. பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். இந்த வெடி விபத்தில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். 29 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 5 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. பின்னர்தான் குண்டுகள் வெடித்தது உறுதியானது. டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை பயன்படுத்தி வெடிக்கச் செய்துள்ளனர் பயங்கரவாதிகள்.

Kerala Blast: Union Minister Amit Shah speaks with CM Pinarayi Vijayan

பயங்கரவாத வெறிச் செயல்: இந்த நிலையில் இந்த வெடி விபத்தின் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகள் குறித்து கேரளா மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கேரளா மாநிலம் முழுவதும் உச்சகட்ட உஷார் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அமித்ஷா தொலைபேசியில் பேச்சு: இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குண்டு வெடிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது குண்டு வெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார். மேலும் குண்டு வெடிப்பு நிகழ்விடத்துக்கு தேசிய பாதுகாப்பு கமாண்டோ படையினர் விரைந்துள்ளனர்.

2 முறை வெடித்த குண்டு: கேரளா மாநில காங்கிரஸ் தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சதீஷன் கூறுகையில், 2 முறை வெடி சப்தம் கேட்டதாகவும் இதனால் தீ பிடித்ததாகவும் கூறப்படுகிறது. 2-வது முறை லேசான வெடி சப்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு பெண் பலியானார். 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரார்த்தனை கூடத்தில் மொத்தம் 2,000க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டிருந்தனர் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+