கேரள தங்க கடத்தல் வழக்கு.. பாஜகவிற்கு நெருக்கமானவர்.. என்ஐஏ விசாரணை வலையில் மூத்த செய்தியாளர்!
திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் புதிய திருப்பமாக அங்கு பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் ஜனம் தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பு தலைமை செய்தியாளர் அணில் நம்பியார் விசாரணைக்கு உள்ளாக்கி உள்ளார்.
கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் இருக்கும் யுஏஇ தூதரகத்தை பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தியதாக முன்னாள் அரசு அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்வப்னா சுரேஷ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்த வழக்கில் நாளுக்கு புதிய தகவல்கள், விவரங்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.
இந்த வழக்கில் கேரளாவின் சிபிஎம் அரசுக்கு எதிராகவும் முதல்வர் பினராயி விஜயனுக்கு கடுமையான புகார்களை பாஜக மற்றும் காங்கிரஸ் வைத்து வருகிறது. ஸ்வப்னா சுரேஷ் முதல்வர் அலுவலகத்தில் வேலை பார்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதிய திருப்பமாக கேரளாவில் பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் ஜனம் தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பு தலைமை செய்தியாளர் அணில் நம்பியார் விசாரணைக்கு உள்ளாக்கி உள்ளார்.
என்ஐஏ அதிகாரிகள் நேற்று அணிலை விசாரணைக்கு உட்படுத்தினார்கள். இவருக்கு ஸ்வப்னா சுரேஷுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனென்றால் ஸ்வப்னா சுரேஷ் உடன் அணில் இந்த வருட தொடக்கத்தில் இருந்து பலமுறை போன் மூலம் பேசி இருக்கிறார்.
சரியாக 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட ஜூலை 5ம் தேதி ஸ்வப்னா சுரேஷுக்கு அணில் போன் செய்து இருக்கிறார். சுமார் 4 நிமிடங்கள் இவர்கள் போனில் பேசி உள்ளனர். அதன்பின் மீண்டும் அதே நாள் ஸ்வப்னா சுரேஷுக்கு அணிலுக்கு கால் செய்து இருக்கிறார். இந்த போன் கால் சுமார் 1.43 நிமிடம் நீடித்து இருக்கிறது.
இதற்கு பின் ஸ்வப்னா சுரேஷ், தனது கடத்தல் கொள்ளைக்கு துணையாக இருந்த சரித் உடன் போனில் பேசி உள்ளார். அதன்பின் ஸ்வப்னா சுரேஷ் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதன் காரணமாகவே தற்போது அணிலிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த அணில் பாஜகவிற்கு நெருக்கமான ஜனம் தொலைக்காட்சியில் மூத்த பொறுப்பில் இருப்பதால் பாஜகவிற்கு இதனால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாருக்கு கேரள பாஜக தலைவர் கே சுரேஷ்ந்திரன் பதில் அளித்துள்ளார். அதில், ஜனம் தொலைக்காட்சி பாஜகவிற்கு சொந்தமானது கிடையாது. அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை, என்று கூறியுள்ளார்.
-
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications