“நான் இருக்கும்போது போராட்டம் நடத்துங்கள்".. ஆளுநர் ஆவேசம்.. கேரளாவில் உச்சம் எடுக்கும் மோதல்
திருவனந்தபுரம்: கேரளாவில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் வலியுறுத்தி வரும் நிலையில் அவருக்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த போராட்டத்தை எதிர்கொள்வதாக ஆளுநர் அறிவித்துள்ளார். இது அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் இரண்டு ஊடகங்களை இந்த சந்திப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மோதல்
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாநில ஆளுநராக உள்ள ஆரிப் முகமதுகானுக்கும் இடையே நிலவி வந்த மோதல் போக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் உரிமை தொடர்பாக மாநில அரசு சமீபத்தில் சட்டமன்றத்தில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதில், இனி மாநில அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் என்றும், ஆளுநர் இதில் தலையீடு செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தது. பாஜக ஆளும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது அம்மாநில அரசுதான் துணை வேந்தர்களை நியமித்து வருகிறது.

துணை வேந்தர்
ஆனால் கேரளாவில் இதற்கு ஆளுநர் தரப்பில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இதனையடுத்து மாநில அரசு நியமித்த அனைத்து துணை வேந்தர்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையில், ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் சட்டவிரோதமானது என அம்மாநில உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த உத்தரவு ஆளுநரின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிட்டது.

போராட்டம்
இந்நிலையில், இன்று கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் முதலமைச்சரை கடுமையாக சாடியுள்ளார். "நான் மோசமாக அச்சுறுத்தப்படுகிறேன். அவர்கள் அறிவித்துள்ள தர்ணா போராட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் நவம்பர் 15ம் தேதி நடத்த வேண்டாம். அன்று நான் ராஜ்பவனில் இருக்க மாட்டேன். எனவே, நான் இருக்கும் மற்றொரு நாளில் போராட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சேனலுக்கு தடை
செய்தியாளர் சந்திப்பின் போது 'மீடியா ஒன்' மற்றும் 'கைராளி' என இரு செய்தி ஊடகங்கள் இந்த சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றிருந்தால் வெளியேற வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டார். கைராளி சேனல் ஆளும் சிபிஎம் கட்சிக்கு சொந்தமானதாகும். மீடியா ஒன் சேனல் பாதுகாப்பு அனுமதி பிரச்சனை தொடர்பாக மத்திய அரசிடமிருந்து தடையை எதிர்கொண்டுள்ளது. இதனை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications