சிஏஏவுக்கு எதிராக எனக்கு தெரிவிக்காமலேயே வழக்கு- கேரளா அரசு மீது ஆளுநர் ஆரிப் முகமது கான் பாய்ச்சல்
திருவனந்தபுரம்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தம்மிடம் தெரிவிக்காமல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவதா? என கேரளா அரசு மீது ஆளுநர் ஆரிப் முகமது கான் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திலும் கேரளா அரசு வழக்கு தொடர்ந்தது.

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முதல் மாநிலம் கேரளா. ஆனால் இதற்கு கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஆரிப் முகமது கான் கூறியதாவது: சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதில் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் ஆளுநர் என்பதால் என்னிடம்தான் கேரளா அரசு முதலில் தெரிவித்திருக்க வேண்டும்.
அரசியல் சாசனப்படி மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆளுநர்நான். ஆனால் நானே பத்திரிகைகளைப் பார்த்துதான் கேரளா அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை தெரிந்து கொண்டேன்.
நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன். கேரளா அரசின் நடவடிக்கையானது ஆளுநருக்கு தரப்பட வேண்டிய மரியாதையை மீறிய செயல்.
Recommended Video
ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மாநில அரசால் எப்படி உச்சநீதிமன்றத்துக்கு போக முடியும் என்பதை நானும் பார்க்கிறேன்.. என்னுடைய ஒப்புதல் தேவை என்பது இல்லை. ஆனால் குறைந்தபட்சம் என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இவ்வாறு ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications