சிஏஏவுக்கு எதிராக எனக்கு தெரிவிக்காமலேயே வழக்கு- கேரளா அரசு மீது ஆளுநர் ஆரிப் முகமது கான் பாய்ச்சல்
திருவனந்தபுரம்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தம்மிடம் தெரிவிக்காமல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவதா? என கேரளா அரசு மீது ஆளுநர் ஆரிப் முகமது கான் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திலும் கேரளா அரசு வழக்கு தொடர்ந்தது.

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முதல் மாநிலம் கேரளா. ஆனால் இதற்கு கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஆரிப் முகமது கான் கூறியதாவது: சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதில் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் ஆளுநர் என்பதால் என்னிடம்தான் கேரளா அரசு முதலில் தெரிவித்திருக்க வேண்டும்.
அரசியல் சாசனப்படி மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆளுநர்நான். ஆனால் நானே பத்திரிகைகளைப் பார்த்துதான் கேரளா அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை தெரிந்து கொண்டேன்.
நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன். கேரளா அரசின் நடவடிக்கையானது ஆளுநருக்கு தரப்பட வேண்டிய மரியாதையை மீறிய செயல்.
Recommended Video
ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மாநில அரசால் எப்படி உச்சநீதிமன்றத்துக்கு போக முடியும் என்பதை நானும் பார்க்கிறேன்.. என்னுடைய ஒப்புதல் தேவை என்பது இல்லை. ஆனால் குறைந்தபட்சம் என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இவ்வாறு ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications