கேரள கோரத்துக்கு இடையே.. சபரிமலை செல்லும் பக்தர்கள்.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
திருவனந்தபுரம்: வரும் 3, 4 ஆம் தேதிகளில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆடி அமாவாசை வரும் 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கேரளாவில் அனைத்து கோவில்கள், நீர் நிலைகளில் பலி தர்ப்பணம் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் குளங்கள், ஆறுகள், கடற்கரை பகுதிகளில் இந்துக்கள் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு ஆடி அமாவாசை வரும் 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கேரளாவில் அனைத்து கோவில்கள், நீர் நிலைகளில் பலி தர்ப்பணம் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

லட்சக்கணக்கான பக்தர்கள் நதிக்கரை ஓரத்தில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வாக இது நடைபெறுகிறது. அது மட்டும் இன்றி முக்கிய கோவில்களுக்கும் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். கேரளாவில் பேய்மழை பெய்து வயநாட்டில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டு 3 நாட்கள் ஆகியும் இன்னும் பலரை கண்டுபிடிக்க முடியவில்லை.
பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கிவிட்டது. கேரளா மட்டும் இன்றி மொத்த தேசத்தையும் வயநாடு நிலச்சரிவு உலுக்கியுள்ளது. இத்தகைய சோக சம்பவத்திற்கு இடையே இந்த ஆண்டு பலி தர்ப்பண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்தகைய சூழலில், கேரள உயர் நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சபரிமலை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காவல்துறை மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வரக்கூடிய பக்தர்கள் பாதுகாப்பான முறையில் வழிபாடுகளை செய்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை எந்த வித பிரச்சினையும் இன்றி செய்து கொடுக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளம், பெருமழை போன்றவற்றால் கடுமையான பாதிப்பை கேரளா சந்தித்து இருக்கக் கூடிய சூழலில், அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.












Click it and Unblock the Notifications