2வது நாளாக 30 ஆயிரம்+ கேஸ்கள்.. 1 லட்சத்திற்கும் அதிகமான ஆக்டிவ் கேஸ்கள்.. கேரளாவில் மோசமான நிலை
திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. அங்கு நேற்று 30,077 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர்.
கேரளாவில் நேற்று முதல்நாள் 31445 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கு தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருவதால் ஆக்டிவ் கேஸ்கள் 1,81,230 ஆக உயர்ந்துள்ளது. அதோடு அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 162 பேர் பலியாகி உள்ளனர்.
20,134 பேர் கேரளாவில் இதுவரை பலியாகி உள்ளனர். 37,11,625 அங்கு இதுவரை குணமாகி உள்ளனர். கேரளாவில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருவது அங்கு மூன்றாம் அலை ஏற்பட்டுவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் இந்தியாவிலேயே அதிக ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. கேரளாவில் இப்போது 1 லட்சத்திற்கும் அதிகமான கேஸ்கள் உள்ளன. இந்தியாவில் வேறு எங்கும் இவ்வளவு ஆக்டிவ் கேஸ்கள் இல்லை. 4 மாநிலங்களில் 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கேஸ்கள் உள்ளன. 31 மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் குறைவான ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.
இந்தியாவில் தினமும் பதிவாகும் புதிய கேஸ்களில் 51 சதவிகித கேஸ்கள் கேரளாவில்தான் பதிவாகிறது. இந்தியாவின் மொத்த கேஸ்களில் பாதி அங்கிருந்து வருகிறது. கேரளாவில் உடனடியாக கொரோனா சோதனைகளை உயர்த்த வேண்டும். அங்கு காண்டாக்ட் டிரேசிங்கை அதிகரிக்க வேண்டும். அங்கு காண்டாக்ட் டிரேசிங் குறைவாகவே செய்யப்படுகிறது.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தீவிரமாக சோதிக்கப்பட வேண்டும். அங்கு 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் வீட்டில்தான் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். இவர்களை முறையாக கண்காணிக்க வேண்டும், என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் இப்படி தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருவது அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications