"ஆபரேஷன் செய்யும் போதும் ஹிஜாப்.." உடனே அனுமதி தாங்க.. மருத்துவ கல்லூரி மாணவிகள் திடீர் கோரிக்கை
திருவனந்தபுரம்: ஆபரேஷன் செய்யும் போது ஹிஜாப் அணிவது தொடர்பாக அனுமதியளிக்க வேண்டும் எனக் கேரள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கடந்தாண்டு ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது அனைவருக்கும் தெரியும். அங்கே கடந்தாண்டு மாணவ, மாணவியர் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து அவர்கள் பெரும் போராட்டம் நடத்திய போதிலும், அப்போது இருந்து பசரவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு விதியை மாற்றவில்லை. நீதிமன்ற தீர்ப்பும் கர்நாடக அரசின் நிலைப்பாட்டை ஒட்டியே வந்தது.

ஹிஜாப்: இதற்கிடையே இப்போது மீண்டும் ஹிஜாப் விவகாரம் பேசுபொருள் ஆகியுள்ளது. இந்த முறை நமது மற்றொரு அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து.,. அங்கே ஆப்ரேஷன் தியேட்டரில் ஹிஜாப் அணிய அனுமதிப்பது தொடர்பாக மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்..
தங்கள் மத நம்பிக்கையின்படி, முஸ்லிம் பெண்கள் எந்த சூழ்நிலையிலும் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்பதால் அதற்கு அனுமதிக்க வேண்டும் எனத் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவிகள் கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்
கடிதம்: அந்த கடிதத்தில், "இங்கே ஹிஜாப் அணியும் முஸ்லீம்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். மத உடைகளை அணிந்து அதேவேலையில் மருத்துவமனை மற்றும் ஆப்ரேஷன் தியேட்டர் விதிமுறைகளுக்கு இணங்கும் வகையிலான சமநிலையைக் கண்டறிவது அவசியம்" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
உலகின் பிற பகுதிகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆப்ரேஷன் தியேட்டர்களில் எந்த மாதிரியான உடைகளை அணிகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு அந்தக் கடிதத்தில் நாம் அதுபோன்ற உடைகளை அணியலாம் எனப் பரிந்துரைத்துள்ளனர்.
நீண்ட கை கொண்ட மேல்சட்டைகள், ஆப்ரேஷன் தியேட்டருக்கு என இருக்கும் தலையைக் கவர் செய்யும் வகையிலான ஆடைகளை அணியலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்ரேஷன் தியேட்டர் விதிமுறைகள், மத நம்பிக்கையான ஹிஜாப் என இரண்டிற்கும் இடையேயான சமநிலையைக் கண்டறிய முடிவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, இதற்குக் கல்லூரி முதல்வர் அனுமதி தர வேண்டும் என்று அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

என்ன சொல்கிறார்: இதற்கிடையே மாணவிகளின் கோரிக்கை குறித்து விவாதிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் டாக்டர் லினெட் மோரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "மாணவிகளின் கோரிக்கையை இப்போது ஏற்க முடியாது. ஆபரேஷன் தியேட்டர்களில் சர்வதேச தரம் பின்பற்றப்படுகிறது. அங்கே அனைத்தையும் விட நோயாளியின் பாதுகாப்பே முக்கியம்.
இந்த விவகாரத்தில் நாம் தானாக முடிவு எடுக்க முடியாது. இது குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் அடிப்படையில் 10 நாட்களில் இந்த விவகாரத்தில் தீர்வு காணப்படும்" என்றார்.
முன்னதாக கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் ஐகோர்ட் கர்நாடக அரசுக்குச் சாதமாகத் தீர்ப்பு கொடுத்தது. இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இரு நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இரு வேறு தீர்ப்புகளை அளித்தன. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது.
-
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
திமுக அரசு மாநில உரிமையை விட்டுக்கொடுத்து தேர்தல் கூட்டணியை உறுதிபடுத்துகிறதா? டிடிவி தினகரன் கேள்வி -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு!












Click it and Unblock the Notifications