Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆபரேஷன் செய்யும் போதும் ஹிஜாப்.." உடனே அனுமதி தாங்க.. மருத்துவ கல்லூரி மாணவிகள் திடீர் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஆபரேஷன் செய்யும் போது ஹிஜாப் அணிவது தொடர்பாக அனுமதியளிக்க வேண்டும் எனக் கேரள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கடந்தாண்டு ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது அனைவருக்கும் தெரியும். அங்கே கடந்தாண்டு மாணவ, மாணவியர் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர்கள் பெரும் போராட்டம் நடத்திய போதிலும், அப்போது இருந்து பசரவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு விதியை மாற்றவில்லை. நீதிமன்ற தீர்ப்பும் கர்நாடக அரசின் நிலைப்பாட்டை ஒட்டியே வந்தது.

 Kerala Medicine Students Seeks permission got Hijab During Surgery

ஹிஜாப்: இதற்கிடையே இப்போது மீண்டும் ஹிஜாப் விவகாரம் பேசுபொருள் ஆகியுள்ளது. இந்த முறை நமது மற்றொரு அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து.,. அங்கே ஆப்ரேஷன் தியேட்டரில் ஹிஜாப் அணிய அனுமதிப்பது தொடர்பாக மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்..

தங்கள் மத நம்பிக்கையின்படி, முஸ்லிம் பெண்கள் எந்த சூழ்நிலையிலும் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்பதால் அதற்கு அனுமதிக்க வேண்டும் எனத் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவிகள் கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்

கடிதம்: அந்த கடிதத்தில், "இங்கே ஹிஜாப் அணியும் முஸ்லீம்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். மத உடைகளை அணிந்து அதேவேலையில் மருத்துவமனை மற்றும் ஆப்ரேஷன் தியேட்டர் விதிமுறைகளுக்கு இணங்கும் வகையிலான சமநிலையைக் கண்டறிவது அவசியம்" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

உலகின் பிற பகுதிகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆப்ரேஷன் தியேட்டர்களில் எந்த மாதிரியான உடைகளை அணிகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு அந்தக் கடிதத்தில் நாம் அதுபோன்ற உடைகளை அணியலாம் எனப் பரிந்துரைத்துள்ளனர்.

நீண்ட கை கொண்ட மேல்சட்டைகள், ஆப்ரேஷன் தியேட்டருக்கு என இருக்கும் தலையைக் கவர் செய்யும் வகையிலான ஆடைகளை அணியலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்ரேஷன் தியேட்டர் விதிமுறைகள், மத நம்பிக்கையான ஹிஜாப் என இரண்டிற்கும் இடையேயான சமநிலையைக் கண்டறிய முடிவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, இதற்குக் கல்லூரி முதல்வர் அனுமதி தர வேண்டும் என்று அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

 Kerala Medicine Students Seeks permission got Hijab During Surgery

என்ன சொல்கிறார்: இதற்கிடையே மாணவிகளின் கோரிக்கை குறித்து விவாதிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் டாக்டர் லினெட் மோரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "மாணவிகளின் கோரிக்கையை இப்போது ஏற்க முடியாது. ஆபரேஷன் தியேட்டர்களில் சர்வதேச தரம் பின்பற்றப்படுகிறது. அங்கே அனைத்தையும் விட நோயாளியின் பாதுகாப்பே முக்கியம்.

இந்த விவகாரத்தில் நாம் தானாக முடிவு எடுக்க முடியாது. இது குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் அடிப்படையில் 10 நாட்களில் இந்த விவகாரத்தில் தீர்வு காணப்படும்" என்றார்.

முன்னதாக கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் ஐகோர்ட் கர்நாடக அரசுக்குச் சாதமாகத் தீர்ப்பு கொடுத்தது. இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இரு நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இரு வேறு தீர்ப்புகளை அளித்தன. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+