கேரளா-நீட் மாணவிகளின் உள்ளாடைகளை களைந்த விவகாரம்-மேலும் 2 ஆசிரியர்கள் கைது- சிக்கியோர் எண்ணிக்கை 7 !
திருவனந்தபுரம்: கேரளாவில் நீட் தேர்வு எழுதிய மாணவிகளின் உள்ளாடைகளை களைந்த விவகாரத்தில் மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17-ந் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. நீட் தேர்வு மையங்களில் மாணவிகள் மிக கடுமையான சோதனைகளுக்குள்ளாக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு நீட் தேர்வின் போதும் இத்தகைய கெடுபிடிகள் சர்ச்சையாவது தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இம்முறை கேரளாவில் நடந்த கெடுபிடிகள் ஒட்டுமொத்த நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கேரளா நீட் தேர்வு
கேரளாவின் கொல்லம் ஆயூரில் உள்ள மார்தோமா தகவல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு மையத்திலும் நீட் முகாமை குறிப்பிட்ட ஆடை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இது தொடர்பான சோதனைகளும் நடத்தப்பட்டன. ஆனால் இதனையும் மீறி இம்மையத்தில் மாணவிகளிடம் காட்டப்பட்ட கடுமைதான் நெஞ்சை பதற வைக்கச் செய்கிறது.

மாணவிகளின் உள்ளாடைகள் கழற்றினர்
இத்தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றினால்தான் தேர்வு மையத்துக்குள் அனுமதிப்போம் என கெடுபிடி காட்டி உள்ளனர். அப்படி உள்ளாடைகளை களைய மறுத்த மாணவிகளுக்கு நீட் தேர்வு எழுதவும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. தேர்வு எழுதச் செல்லும் போது, உள்ளாடைகளை கழற்ற வேண்டிய கொடுமை நேர்ந்ததால் பல மாணவிகள் தேர்வை எழுதவும் இல்லை.. அப்படி எழுதியவர்களும் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகினர்.

வெடித்தது போராட்டம்
இது தொடர்பாக மாணவிகள் பெற்றோரிடம் குமுறி அழுதனர். இதனையடுத்தே இந்த விவகாரம் நாடு முழுவதும் பரவி அதிர்ச்சியையும் கடுமையான கண்டனத்தையும் எதிர்கொண்டது. கேரளா அரசு தரப்போ, நீட் ஏஜென்சிதான் இத்தகைய கெடுபிடிகளுக்கு காரணம் என பாய்ந்தது. அதேநேரத்தில் மாணவிகளிடம் இப்படி நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி தேர்வு மையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் தடியடி நடத்தினர். அங்கு பெரும் பதற்றத்தையும் இச்சம்பவம் ஏற்படுத்தி இருந்தது.

மொத்தம் 7 பேர் கைது
மேலும் மாணவிகளின் உள்ளாடைகளை களைந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் 2 ஆசிரியர்களும் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த பிரச்சனையில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications