சபரிமலை மகரவிளக்கு பூஜை.. இன்று மாலை 5 மணிக்கு நடை திறப்பு
பம்பை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஜனவரி 19-ந் தேதி வரை அனைத்து நாட்களிலும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
Recommended Video

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை கடந்த டிசம்பர் 26-ந் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டது.

கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் குறைவான பக்தர்களே மண்டல பூஜைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் கோவில் நடை திறக்கப்படுகிறது.
கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நாள்தோறும் 5,000 பக்தர்கள் வரை சன்னிதானத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.
நாளை அதிகாலை முதல் ஜனவரி 19-ந் தேதி சுவாமி ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மகரவிளக்கு பூஜை முடிவடைந்த பின்னர் ஜனவரி 20-ந் தேதி கோவில் நடை மூடப்படும்.












Click it and Unblock the Notifications