அதிர்ச்சியில் கேரளா: நிபா வைரஸால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 175 பேர் தீவிர கண்காணிப்பில்!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக 175 பேர் கண்டறியப்பட்டு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட 175 பேரில் 74 பேர் சுகாதாரத்துறை பணியாளர்கள்.
கேரளாவில் கொரோனா கால அச்சம் தற்போது நிபா வைரஸ் தொற்றால் உருவாகி உள்ளது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் 24 வயது இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். இதனையடுத்து கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் உடனடி பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேரளா அரசுக்கு மத்திய அரசும் அறிவுறுத்தியது. அதாவது நிபா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்டவரின் குடும்பம், சுற்றுப்புறங்களில் ஆய்வு மேற்கொள்ளுதல், கடுமையாக தனிமைப்படுத்துதல் மற்றும் சந்தேக நபர்களை தனிமைப்படுத்துதல். ஆய்வகப் பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் கூட்டு நோய்ப்பரவல் கட்டுப்பாட்டுக் குழு அமைக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நிபா வைரஸால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக 175 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த 175 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 74 பேர் சுகாதாரத்துறை பணியாளர்கள் என்று கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்த 175 பேரில் 13 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இந்த 13 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது மலப்புரம் மாவட்டத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கேரளாவில் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கர்நாடகா அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கேரளாவில் 2021, 2023-ம்ஆண்டுகளில் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக பழ வெளவால்கள் வைரஸின் ஆதாரமாகும். மேலும் தற்செயலாக வௌவால் கடித்த பழங்களை உட்கொள்வதன் மூலம் மனிதர்கள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications