கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவருக்கு கொரோனா.. மீட்பு படையினருக்கு பரிசோதனை செய்வது கட்டாயம்
திருவனந்தபுரம்: கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா உறுதியானதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து மீட்பு படையினர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் கோழிக்கோடு விமான விபத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை அரசு சார்பில் எடுக்கப்படும்.

மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் சுகாதாரத் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் 1056, 0471 2552056 ஆகிய எண்களுக்கு தகவல்கள் தெரிவிக்கலாம். மீட்பு பணிகளில் யார் யார் ஈடுபட்டார்கள் என்பது குறித்த பட்டியலை சுகாதாரத் துறை தயார் செய்கிறது என ஷைலஜா தெரிவித்திருந்தார்.
துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கேரளா உயர்கல்வித் துறை அமைச்சர் ஜலீல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் விமானத்தில் பயணம் செய்த சுதீர் வர்யாத்திற்கு (45) கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு நோய் தொற்று உறுதியானது என்றார்.
இந்த நிலையில் இந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் விமானம் விபத்திற்குள்ளானதற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தார். மேலும் அந்த கருப்பு பெட்டிகள் டெல்லிக்கு அனுப்பி விசாரணை நடத்தப்படும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications