Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்.. இருமுடியை இனி விமானத்தில் எடுத்து செல்லலாம்! மத்திய அரசு அனுமதி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், தங்களது இருமுடியை இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

Sabarimala airline Civil Aviation

"இருமுடியின் மீது பக்தர்கள் கொண்டுள்ள ஆழமான உணர்வுகளை புரிந்து கொண்டு, விமானத்தில் இரு முடியை கொண்டு செல்ல அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில், அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படும்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.

விமானத்தில் செல்பவர்கள் 100 மி.லி-க்கு மேல் திரவப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவது கிடையாது. அதாவது இந்த பொருட்கள் லக்கேஜ் பிரிவில் வரவேண்டும். கையில் எடுத்துச் செல்லப்படும் திரவப் பொருட்கள் 100 மி.லி-க்கு குறைவாக இருக்க வேண்டும். ஐயப்ப பக்தர்கள் கொண்டு செல்லும் இருமுடியில் நெய் தேங்காய் இடம் பெற்று இருக்கும். இதில் உள்ள நெய் 100 கிராமுக்கும் அதிகமாக இருக்கும் என்பதால், கையில் எடுத்து செல்ல முடியாத நிலை இருந்தது.

ஆனால், இருமுடியை பதிவு செய்யப்பட்ட உடமையாக லக்கேஜ் கொண்டு செல்ல முடியும். இந்நிலையில் தற்போது கையில் கொண்டு செல்ல மத்திய அமைச்சர் அனுமதி வழங்கியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+