கார்ல பொண்ணுங்க இருந்தா இறக்கிவிட்டுடுங்க.. சபரிமலையில் பெண் போராளிகள் கெடுபிடி - வீடியோ
கேரளாவில் சபரிமலைக்கு பெண்களை செல்ல விடாமல் அங்குள்ள பெண் போராளிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்கு பெண்களை செல்ல விடாமல் அங்குள்ள பெண் போராளிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கோவிலுக்குள் பெண்கள் செல்வதற்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கேரளா அரசு மறுத்துள்ளது.
இது இந்துத்துவா அமைப்புகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாளை கேரளாவில் என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
[போராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்]

கடும் எதிர்ப்பு
இன்று காலையே சில பெண்கள் கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்றார்கள். ஆனால் அங்கிருந்த இந்துத்துவா அமைப்பினர் பெண்கள் யாரையும் உள்ளே விடவில்லை. காலையில் அங்கு செய்து சேகரிக்க சென்ற பெண் செய்தியாளர்களையும் அவர்கள் உள்ளே விடவில்லை. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
|
சோதனை செய்வார்கள்
இந்த நிலையில் இன்றே தொடங்கப்பட்டுவிட்டது. கேரளாவில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த பெண்கள் வரிசையாக வந்து நின்று கோவிலுக்கு உள்ளே செல்லும் கார்களை மறித்து சோதனை செய்து வருகிறார்கள். காருக்குள் பெண்கள் இருந்தால் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு வெளியே நிற்க சொல்கிறார்கள். இது குறித்து வீடியோ வெளியாகி உள்ளது.

அரசு விடாப்பிடி
ஆனால் என்ன நடந்தாலும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது. கோவிலுக்குள் செல்லும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான போலீஸ் இப்போதே அங்கு அதிக அளவில் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள்.

என்ன நடக்கும் எதிர்பார்ப்பு
இந்த நிலையில் 30 அமைப்புகள் பெண்கள் கோவிலுக்கு செல்வதற்கு எதிராக களமிறங்கி உள்ளது. அரசும், சில காங்கிரஸ் ஆதரவாளர்களும் பெண்கள் கோவிலுக்குள் செல்ல ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக போலீஸ் பாதுகாப்பை மீறி நாளை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு கேரளாவில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications