சாதிவெறி பிடித்த ஆர்எஸ்எஸ்தான் சபரிமலை பிரச்சனைக்கு காரணம்.. பினராயி பரபரப்பு குற்றச்சாட்டு!
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக நடக்கும் போராட்டம் அனைத்திற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புதான் காரணம் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக நடக்கும் போராட்டம் அனைத்திற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புதான் காரணம் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக 2வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு பம்பை, நிலக்கல், சன்னிதானம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலவரம் நடப்பதை தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
[நடை திறக்கும் முன் நான் சென்றுவிடுகிறேன்.. சபரிமலைக்காக குருசாமி தற்கொலை.. உருக்கமான கடிதம்! ]

இதுவரை செல்லவில்லை
இரண்டு நாட்கள் ஆகியும் இதுவரை சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் யாரும் செல்லவில்லை. இந்துத்துவா அமைப்பை சேர்ந்த போராட்டக்காரர்கள் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. மீறி செல்லும் பெண்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
|
என்ன கசக்கிறது
பினராயி விஜயன் தனது டிவிட்டில், மற்ற கோவில்களுக்கு இல்லாத தனித்தன்மை சபரிமலை கோவிலுக்கு உள்ளது. எல்லா மதத்தினரையும் இந்த கோவில் உள்ளே அனுமதிக்கிறது. அதுதான் ஆர்எஸ்எஸுக்கு பிரச்சனையாக உள்ளது. அதை அழிக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தற்போது முயல்கிறார்கள்.
|
ஆர்எஸ்எஸ் அமைப்பு
சபரிமலையில் ஆதிவாசிகள் செய்த வழிபாட்டு முறையை நீக்க ஆர்எஸ்எஸ் அமைப்பினர்தான் காரணமாக இருந்தனர் என்று எல்லோருக்கும் தெரியும். தற்போது நடக்கும் பிரச்சனையின் உண்மைநிலை உலகிற்கு தெரிய வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பினர்தான் மக்கள் மீதும் பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்துவது.
|
ஜாதி வெறி
இவர்கள் எல்லோரும் ஜாதி வெறியும், நிலவெறியும் பிடித்து இந்த தாக்குதலை நடத்துகிறார்கள். இதை ஆதரிப்பது சபரிமலையில் இருக்கும் அடித்தட்டு மக்களுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும். பக்தர்கள் அனைவரும் மக்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்களை கண்டிக்க வேண்டும், என்றுள்ளார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications